மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ‘வேதா இல்லம்’ யாருக்கு?- இன்று தீர்ப்பு!

Default Image

சென்னை:மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு தடை விதித்து தீபா மற்றும் தீபக் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு.

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லம் எனும் வீட்டில்தான் வசித்து வந்தார்.இதனையடுத்து,அவர் மறைந்த நிலையில்,இந்த இல்லத்தை நினைவிடமாக மாற்ற உள்ளதாக 2017 ஆம் ஆண்டு அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவித்திருந்தார்.இதனைத் தொடர்ந்து,அந்த இடத்தை தமிழக அரசு அரசுடைமை ஆக்குவது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது.

ஆனால்,இதனை எதிர்த்து போயஸ் கார்டனில் குடியிருப்போர் மற்றும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மற்றும் மகன் தீபக் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு நீண்ட மாதங்களாக நிலுவையில் இருந்து வருகிறது.

இந்நிலையில்,இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு இன்று பிற்பகல் வெளியாக உள்ளது.வேதா இல்லம் அரசுக்கு சொந்தமாகுமா? என்பது தொடர்பாக சென்னை உயநீதிமன்ற நீதிபதி என்.சேஷசாயி இந்த தீர்ப்பினை வழங்குகிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்