முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவே சிறையில் இருந்தார். எனவே நாங்கள் எதற்கும் தயாராக தான் இருந்தோம் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவையில் அதிமுக அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களை பழிவாங்கும் சூழல் உருவாகியுள்ளது. தன் மீது எந்த வழக்கை போட்டாலும் சந்திக்க தயாராக இருப்பதாகவும், ஆனால், தொண்டர்கள், பொறுப்பாளர்கள் மீது வழக்கு போட்டால் விடமாட்டோம் என தெரிவித்தார். மேலும், ஊழல் குற்றசாட்டில் வழக்கு பதியும் போது, முதலில் தன் மீது தான் வழக்கு பதிவு செய்வார்கள் என்று எதிர்பார்த்தேன். ஏனென்றால், எடப்பாடியார் தலைமையில் இந்த ஆட்சி நடைபெற 4 வருடங்கள் முக்கியமான காரணமாக நான் இருந்தேன் என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவே சிறையில் இருந்தார். எனவே நாங்கள் எதற்கும் தயாராக தான் இருந்தோம் என தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழகத்தில் சமீபகாலமாக பல்வேறு இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சி…
சென்னை : முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. 2025-26 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய…
நாகர்கர்னூல் : தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் கடந்த சனிக்கிழமை காலை…
வங்கதேசம் : வங்காள விரிகுடாவில் இன்று அதிகாலை 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம்…
துபாய் : வங்கதேச அணிக்கு எதிராக நேற்றைய தினம் நடந்த போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதன் மூலம் அரையிறுதி…
சென்னை : தமிழ்நாடு பட்ஜெட் வரும் 14 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்று (பிப்.25) அமைச்சரவை…