சென்னையில் குடியேற விரும்புகிறேன்- முன்னாள் தலைமை நீதிபதி தஹில் ரமானி

Default Image

சென்னையில் குடியேற விரும்புகிறேன் என்று  முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமணி தெரிவித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமணியை மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி நீதிபதி பணிநியமன குழுவான கொலிஜியம் பரிந்துரை செய்து இருந்தது.ஆனால் இதனை ஏற்க மறுத்த ரமணி தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் அதன் நகலை உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் ஆகியோருக்கு அனுப்பி வைத்திருந்தார்.இறுதியாக தஹில் ரமணியின் ராஜினாமா ஏற்கப்பட்டது.

இந்த நிலையில் முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமணிக்கு பிரிவு உபசார விழா நடைபெற்றது.விழாவில் தஹில் ரமணி பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில்,மும்பையுடன் ஒப்பிடும் போது சென்னை அனைத்து வகையிலும் சிறந்து விளங்குகிறது. இதனால் சென்னையில் குடியேற விரும்புகிறேன்.மேலும் கடந்த ஓராண்டில் 5040 வழக்குகளை முடித்துள்ளேன்  என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live tn
Elon musk
Sanju Samson
DMK MP A Rasa Speak about Waqf Act 2025
CM MK Stalin writes to PM Modi
Union minister Kiran Rijiju
Yashasvi Jaiswal