மகனும் தோல்வி,மகளும் தோல்வி – காரணத்தை கூறிய அதிமுக முன்னாள் எம்.பி.

Published by
Venu
  • அதிமுகவின் முன்னாள் எம்.பி. அன்வர் ராஜாவின் மகள் மற்றும் மகன் தேர்தலில் தோல்வி அடைந்துள்ளனர்.
  • இது குறித்து அன்வர் ராஜா விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் 27 மாவட்டங்களுக்கு மட்டும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற்றது. நேற்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.ஒரு சில மாவட்டங்களில் இழுபறி நிலை நீடித்து வரும் நிலையில் அநேக இடங்களில் வேட்பாளர்களின் வெற்றி அறிவிக்கப்பட்டு வருகிறது.

அதிமுக முன்னாள் எம்.பி .அன்வர் ராஜா ஆவார்.இவர் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்.உள்ளாட்சித் தேர்தலில் இவரது மகள் ராவியத்துல் அதரியா ராமநாதபுரம் மண்டபம் ஒன்றியம் 2 வது வார்டில் போட்டியிட்டார்.ஆனால் இவரை எதிர்த்து போட்டியிட்ட  திமுக வேட்பாளர் சுப்பு லட்சுமியிடம் 1343  வாக்குகள் குறைவாக  பெற்று தோல்வி அடைந்தார். அன்வர் ராஜாவின் மகனும் தோல்வி அடைந்தார்.மண்டபம் ஒன்றியம் 16- வது வார்டில் போட்டியிட்ட  அன்வர் ராஜாவின் மகன் நாசர் அலியை திமுக வேட்பாளர் தவ்பீக் அலி தோற்கடித்தார்.

இந்நிலையில் இது குறித்து அதிமுக முன்னாள் எம்.பி.அன்வர் ராஜா கூறுகையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்ததால் அதிமுகவுக்கு சிறுபான்மையினர் வாக்களிக்கவில்லை.  தேசிய குடியுரிமை பதிவேடு நாடு முழுவதும் அமலாகும் என்ற அச்சம் சிறுபான்மையினர் மத்தியில் நிலவுகிறது.இதனால் அதிமுக தனது முடிவில் பரிசீலனை செய்யும் என்று நம்புவதாக கூறினார்.

Recent Posts

“அவருக்கு துளிகூட பயம் இல்லை” ! ரிஷப் பண்ட்டை புகழ்ந்த ஆடம் கில்கிறிஸ்ட்!

“அவருக்கு துளிகூட பயம் இல்லை” ! ரிஷப் பண்ட்டை புகழ்ந்த ஆடம் கில்கிறிஸ்ட்!

சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…

20 mins ago

“அதிமுக மீண்டு வரவேண்டும்” உதயநிதி விருப்பம்.!

சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…

20 mins ago

3 நாள் பயணமாக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி.!

டெல்லி : குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 3 நாள் அரசுமுறைப்…

33 mins ago

திருப்பதி லட்டுக்களில் மிருக கொழுப்புகள்.? திண்டுக்கல்லில் மத்திய ஆய்வு குழு.!

திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…

1 hour ago

புதிய உச்சத்தை தொட்டது தங்கம் விலை… சவரனுக்கு ரூ.600 உயர்வு.!

சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…

1 hour ago

லெபனான் – இஸ்ரேல் தாக்குதல் : ஹிஸ்புல்லா முக்கிய புள்ளி உயிரிழப்பு!

பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…

2 hours ago