அணில்களால் மின்தடை ஏற்படுகிறது என்று கண்டுபிடித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,தமிழகத்தில் செடி, கொடிகளால் மட்டும் மின்வெட்டு பிரச்சனை ஏற்படுவதில்லை.அதன் மேலே ஓடும் அணில்கள் இரண்டு வயர்களை உரசுவதாலும் மின் துண்டிப்பு ஏற்பட்டு,அதனால் மின்தடை ஏற்படுவதாக கூறியிருந்தார்.
இதனையடுத்து,நெட்டிசன்கள்,அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்டோர் அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் கூறியதற்கு கிண்டலளிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வந்தனர்
இந்நிலையில்,இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு,”அணில்களால் மின்தடை ஏற்படுகிறது என்று கண்டுபிடித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களுக்கு ஆஸ்கார் விருது மற்றும் நோபல் பரிசு வழங்க வேண்டும்.
நல்ல வேளையாக நான் தப்பித்து விட்டேன்.மேலும்,எங்கள் ஆட்சியில் வெளிநாடுகள் சென்ற அணில்கள் தற்போது தமிழ்நாட்டில் உள்ள மின்கம்பிகளில் சென்றுக்கொண்டிருகின்றன”,என்று தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…