திமுகவின் முடிவுரைக்கு முடிவு எழுதும் விதமாக இடைத்தேர்தல் முடிவுகள் வரும்.! ஜெயக்குமார் பேட்டி.!

Published by
மணிகண்டன்

திமுகவின் முடிவுரைக்கு முடிவு எழுதும் வகையில் இந்த தேர்தல் முடிவுகள் இருக்கும். – அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேட்டி. 

வரும் பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் , திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பாக இவிகேஎஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். அதே போல, தேமுதிக, அமமுக போன்ற கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்துவிட்டனர்.

ஆனால் எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை. இந்நிலையில், இன்று தமிழக தேர்தல் ஆணையரிடம் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு ஒன்றை அளித்துள்ளார். அது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

அவர் கூறுகையில், திமுக அரசு நிர்வாக இயந்திரத்தை தவறாக பயன்படுத்தி குறுக்கு வழியில் போலியான வெற்றியை பெற முயன்று வருகிறது. மேலும், ஜனநாயக விரோத செயல்களில் திமுக அரசு ஈடுபடுகிறது. அமைச்சர் கே.என்.நேரு அண்மையில் பேசிய ஆடியோ கூட இணையத்தில் வெகு வைரலாக பரவி வருகிறது. இதனையெல்லாம் குறிப்பிட்டு தேர்தலை முறையாக நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திமுகவின் முடிவுரைக்கு முடிவு எழுதும் வகையில் இந்த தேர்தல் முடிவுகள் இருக்கும். என்று குறிப்பிட்ட அவர் அம்மா திட்டங்கள் மூடி மறைக்கப்படுகிறது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 அதிமுக வெல்லும். வரும் 7ஆம் தேதிவரை கால அவகாசம் இருக்கிறது ஆகவே விரைவில் இடைத்தேர்தல் வேட்பாளரை அறிவிப்போம். திமுக போலி வாக்காளர் அடையாள அட்டை தயாரிக்கிறது அதனை தடுக்கவும் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளோம் என முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

திருப்பதி லட்டு விவகாரம் : 34 ஆயிரம் கர்நாடகா கோயில்களுக்கு பறந்த உத்தரவு.!

திருப்பதி லட்டு விவகாரம் : 34 ஆயிரம் கர்நாடகா கோயில்களுக்கு பறந்த உத்தரவு.!

பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…

2 mins ago

INDvsBAN : வங்கதேசத்துக்கு 515 ரன்கள் இலக்கு! கட்டுப்படுத்துமா இந்திய அணி?

சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…

13 mins ago

“நமக்கு அது செட் ஆகாது”…வேட்டையன் இயக்குனருக்கு கண்டிஷன் போட்ட ரஜினிகாந்த்!

சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…

35 mins ago

“நான் ஒரு தோற்றுப்போன அரசியல்வாதி.,” கமல்ஹாசன் பேச்சு.!

சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…

37 mins ago

பாடகியுடன் தொடர்பா? “சொந்த வாழ்க்கையில் தலையிடாதீர்” பொங்கிய ஜெயம் ரவி.!

சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…

54 mins ago

“அவங்களுக்கு மன நலம் சரியில்லை”…சுசித்ரா வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த வைரமுத்து?

சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…

1 hour ago