கட்டாய திருமணத்தை எதிர்த்து நேரடியக காவல் நிலையத்துக்கு புகார் மனுவுடன் சென்ற சிறுமிக்கு குவியும் பாராட்டுக்கள்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த 15 வயது கொண்ட சிறுமி ஒருவர் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள அவரது தாத்தா பாட்டி வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு அவரது தாத்தா பாட்டி 28 வயது நிறைந்த இளைஞன் ஒருவரை திருமணம் செய்து கொள்ளும்படி கட்டாயப்படுத்தியுள்ளனர்.
அதற்கு மாணவி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார், இருப்பினும் கடந்த வியாழக்கிழமை இரவு ஒரு மலையடிவார கோவிலுக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவி மணமகனை கட்டி கொள்ளும்படி அதட்டப்பட்டுள்ளார். வெளியேற முயன்ற சிறுமி இது சரிப்படாது என்பதை நினைவில் கொண்டு துணிச்சலாக மாவட்ட சமூக நல அலுவலர் முருகேஸ்வரி அவர்களிடம் சென்று புகார் அளித்துள்ளார். பின் வெள்ளிக்கிழமை காலை வீட்டை விட்டு சென்ற சிறுமி நேரடியாக காவல் நிலையத்துக்கு சென்று தனக்கு நடந்த கொடூரமான அனுபவத்தை தெரிவித்துள்ளார்.
பின்பும் எவ்வாறு உனக்கு இப்படிப்பட்ட துணிச்சல் வந்தது என்று காவல் நிலையத்தில் பாராட்டுடன் கேள்வி கேட்கப்பட்டதற்கு எங்களது பள்ளியில் இதுபோன்ற ஒரு விழிப்புணர்வு நாடகத்தை நான் பார்த்திருக்கிறேன். எந்தவொரு அநீதியான புகாரையும் துணிச்சலாக மேற்கொள்ளலாம் என்று அதன் கருத்து இருந்தது. அதனால்தான் எனக்கு இந்த தைரியம் வந்தது, என்று தனது வீரம் வந்த கதையையும் பிடிப்பில்லாத திருமணத்தையும் பற்றிக் கூறவே போலீசார்கள் உடனடியாக மாணவிக்கு நீதி வழங்க செயல்பட்டு வருகின்றனர்.
திருச்செந்தூர் : ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தமிழ்நாட்டில் சனாதன தர்ம யாத்திரையை தொடங்கியுள்ளார். அதன்படி, தமிழகத்தில் நான்கு…
டெல்லி : மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மாநில முதல்வர் பிரேன் சிங் ராஜிநாமா செய்து 5…
சென்னை : தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் வசம் உள்ள காதி, கிராம…
பாகிஸ்தான் : கராச்சியில் நடைபெற்ற நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா இடையேயான முத்தரப்பு கிரிக்கெட் தொடரின்போது, ஐசிசி நடத்தை விதிகளின் நிலை…
சென்னை : இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கும் 'ரெட்ரோ' திரைப்படத்தின் முதல் பாடலான…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான விடாமுயற்சி படம் உலகம் முழுவதும் 300 கோடிகள்…