மூன்றாவது முறையாக கோவை விவசாய நிலத்தில் 15அடி நீள ராஜநாகம்.! பதற வைக்கும் புகைப்படங்கள்.!

Published by
Ragi

கோவையில் உள்ள விவசாய நிலத்திலிருந்து மூன்றாவது முறையாக 15அடி நீளமுள்ள ராஜநாகத்தை வனத்துறையினர் மீட்டுள்ளனர்.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரை அடுத்த நரசீபுரம் மலையடிவார பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் ராஜநாகம் ஒன்று புகுந்துள்ளதாக போளுவாம்பட்டி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலை தொடர்ந்து வனச்சரகர் ஆரோக்கியசாமி தலைமையில் சம்பவ இடத்திற்கு சென்று, பாம்பு பிடிக்கும் நபர்களின் உதவியுடன் விவசாய நிலத்தில் புகுந்த 15 அடி வரை நீளமுள்ள பெண் ராஜநாகத்தை பத்திரமாக மீட்டனர்.

ஏற்கனவே நரசீபுரம் விவசாய நிலத்திலிருந்து இரண்டு முறை ராஜநாகம் பிடிக்கப்பட்டு வைதேகி நீர் வீழ்ச்சி அருகில் உள்ள வனப்பகுதியில் விடப்பட்டது. ஆனால் மீண்டும் மீண்டும் ராஜநாகம் நரசீபுரம் விவசாய நிலத்தில் வருவதால் மக்கள் பீதியில் உள்ளனர். தற்போது அந்த ராஜநாகத்திற்கு மக்களால் ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதால், 15அடி நீள ராஜநாகத்தின் உடல்நிலையை பரிசோதித்த பின்னர், அதனை வனத்துறையினர் சிறுவாணி அடர்வனப் பகுதிக்கு சென்று விடுவித்துள்ளனர்.

Published by
Ragi

Recent Posts

கடைசி நேரம் வரை திக் திக்…மும்பையை வீழ்த்தி பெங்களூர் த்ரில் வெற்றி!

மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி…

10 minutes ago

என்னதான் ஆச்சு? மீண்டும் சொதப்பிய ரோஹித் சர்மா..டென்ஷனில் ரசிகர்கள்!

மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…

2 hours ago

MIvsRCB : படிதார், கோலி அதிரடி! மும்பைக்கு இது தான் இலக்கு!

மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…

2 hours ago

புகழ்ந்து பேசிய அண்ணாமலை..மேடையில் வைத்தே பதிலடி கொடுத்த சீமான்!

சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…

4 hours ago

MIvRCB : அணிக்கு திரும்பிய நம்பிக்கை நட்சத்திரம் பும்ரா…டாஸ் வென்று மும்பை பந்துவீச்சு தேர்வு!

மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…

5 hours ago

“சீமான் அண்ணன், போர்க்களத்தில் இருக்கும் ஒரு தளபதி!” அண்ணாமலை புகழாரம்!

சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…

5 hours ago