படத்தில் வாய்ப்புக்காக ; முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்..!

Default Image

உதயநிதி படத்தில் தனக்கு ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காக முதல்வர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்.

நேற்று சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தொலைபேசியில் பேசினார். அப்போது நாளை முதல்வர் வீட்டிற்கு வெடிகுண்டு வைக்கப் போவதாக மிரட்டி இணைப்பை துண்டித்து விட்டார். இதைத்தொடர்ந்து, போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் வண்டலூரை அடுத்த மாம்பாக்கம் பகுதியில் அந்த அடையாளத்தை நபரை கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் பெயர் பழனிவேல் என்பதும் கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் எனவும் சென்னையில் தங்கி சமையல் வேலை செய்து கொண்டிருப்பதாக தெரிய வந்தது. மேலும் அவர் உதயநிதி ஸ்டாலினின் தீவிர ரசிகர் எனவும், உதயநிதி படத்தில் தனக்கு ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காக வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக விசாரணையில் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்