முதல் முறையாக நெமிலி ஒன்றியக்குழு தலைவர் பதவியை திமுக கைப்பற்றியுள்ளது.
தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலான கடந்த அக்.6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற்று,பின்னர் வெற்றி பெற்றவர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.இதனைத் தொடர்ந்து,கடந்த 22 ஆம் தேதி 9 மாவட்டங்களுக்கான மாவட்ட ஊராட்சி ,ஊராட்சி ஒன்றியம் தலைவர் மற்றும் துணைத்தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது. இதனையடுத்து,இதில் வெற்றி பெற்றவர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.
இந்நிலையில்,கடந்த 22 ஆம் தேதி நடைபெறவிருந்த ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள நெமிலி ஊராட்சி ஒன்றிய தலைவர், துணை தலைவருக்கான மறைமுக தேர்தல் அதிகாரிகள் செய்த சிறிய குளறுபடிகள் காரணமாக அதிமுக கொடுத்த புகாரின் அடிப்படையில் நீதிமன்ற உத்தரவின் பேரில் தள்ளிவைக்கப்பட்ட நிலையில்,இன்று மறைமுக தேர்தல் போலீசார் பாதுகாப்புடன் நடத்தப்பட்டது.இதுவரை அதிமுக மட்டுமே நெமிலி ஒன்றியக் குழு தலைவருக்கான தேர்தலில் வெற்றி பெற்று வந்த நிலையில்,தற்போது முதல் முறையாக திமுக வென்றுள்ளது.
திமுகவை சேர்ந்த வடிவேலு நெமிலி ஒன்றியக் குழு தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
கொல்கத்தா : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் ஈடன் கார்டன் மைதானத்தில்…
சென்னை : கடந்த மாதம் 14-ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் பொது பட்ஜெட்டும், 15ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல்…
டெல்லி : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், ஏப்ரல் 21, 2025 அன்று புதுதில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.…
கடலூர் : தமிழ்நாட்டில் 2026-ல் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து, பல்வேறு அரசியல் கட்சியினர் தங்கள் தேர்தல் வியூக நகர்வுகளை…
கொல்கத்தா : நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன்…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…