45 வயதான ஆண் ஒருவர் நெல்லை மாவட்டத்தில் முதல் முறையாக பிளாஸ்மா தானம் செய்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகளவில் பரவி வருகிறது. பிளாஸ்மா சிகிச்சை நோயாளிகள் விரைவில் குணமடைய உதவுதாக மருத்துவர்கள் தெரிவித்தனர் . இந்நிலையில் 2 கோடி ரூபாய் மதிப்பில் சென்னையில் பிளாஸ்மா வங்கி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையைத் தொடர்ந்து திருச்சி, நெல்லை, மதுரையிலும் பிளாஸ்மா வங்கி தொடங்கவுள்ளது.
கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு அதிலிருந்து குணமடைந்த நோயாளியின் உடலில் இருக்கும் இரத்திலிருந்து பிளாஸ்மாவை பிரித்தெடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளியின் உடலில் செலுத்தி சிகிச்சை அளிக்கும் முறை தான் பிளாஸ்மா சிகிச்சை.இதில் கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் 14 நாட்களுக்கு பிறகு பிளாஸ்மா தானம் செய்யலாம், தானம் பெறும் பிளாஸ்மாவை ஓராண்டு வரை பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் கொரோனா தோற்றலிருந்து
இதுவரை வரை 1909 பேர் குணமடைந்து வீடு திரும்பினார். இந்நிலையில் நெல்லை மாவட்டம் மாவட்டத்தில் 45 வயதான ஆண் ஒருவர் நெல்லை மாவட்டத்தில் முதல் முறையாக பிளாஸ்மா தானம் செய்துள்ளார். இவர் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த 1 மாதத்திற்கு முன்னர் குணமடைந்தார் ஒரு மாதமாக அவருக்கு எவ்வித அறிகுறியும் இல்லாததால் உடல் முழுவதும் பரிசோதனை செய்யப்பட்டு அவரிடம் இருந்து பிளாஸ்மா திறப்பின் மூலம் பெறப்பட்டது.
கடலூர் : சிதம்பரம் அருகே உள்ள சத்திரப்பட்டி என்ற பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. இந்த நபரின் பெயர் ஸ்டீஃபன்…
வாஷிங்டன் : உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் தொலைபேசியில் உரையாடியுள்ளனர். கடந்த…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடியும், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸும் புது டெல்லியில் நேற்று சந்தித்து கொண்டனர்.…
சென்னை : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று அவரது…
சென்னை : சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் தனியாக ஒரு படத்தில் நடிக்க எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே அளவுக்கு அவர்…
மேற்கு வங்கம் : ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு பணிகளுக்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி…