சென்னை மக்கள் கவனத்திற்கு..! இன்று 200 வார்டுகளில் சிறப்பு மருத்துவ முகாம்..!

Default Image

இன்று சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது.

தமிழகம் முழுவதும்  கடந்த சில நாட்களாக, பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் நிலையில், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது.

குறிப்பாக சென்னையில் பல பகுதிகள் மழையால் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இதனையடுத்து, மழையால் பாதிக்கப்பட்ட பகுதியில் வாசித்த மக்கள், தற்போது வெல்ல நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மழை நீர் தேங்கி இருப்பதால், சுகாதார சீர்கேடுகள் காரணமாக, தொற்றுநோய் பரவும் ஆபத்து இருப்பதால், அதனை தடுக்க தமிழக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இன்று சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது. இதனையடுத்து, ஆழ்வார்பேட்டையில் சிறப்பு மருத்துவ முகாமை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்