சிலபேர் அழிம்பு புரிவது அரசியல் செய்வதற்கே -வைரமுத்து

நெறியின் வழியே நீண்டு நடப்பது நீதி நிலைப்பதற்கே என்று வைரமுத்து ட்வீட் செய்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் , பெண்கள் குறித்தும், மதம் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில், அவதூறாக பேசியதாகக் கூறப்படுகிறது. எனவே இது குறித்து திருமாவளவன் கூறுகையில்,மனுநீதி நூல்களில் உள்ளது ,பற்றி நான் பேசியதைத் திரித்து, பொய்யைப் பரப்புகிறது வக்கிரபுத்தி கொண்ட கும்பல் என்று விளக்கம் அளித்தார். இதற்கிடையில், நேற்று சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். திருமாவளவனுக்கு ஆதரவாகவும் ஒரு சில அரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,திருமா வளவன் தீட்டிய அரிவாள் தென்னவர் சுழற்றியதே – அவன் அரிமா போலே ஆர்த்த கருத்தும் அரிவையர் வாழ்வதற்கே – அதை அறிந்தும் சிலபேர் அழிம்பு புரிவது அரசியல் செய்வதற்கே – நாம் நெறியின் வழியே நீண்டு நடப்பது நீதி நிலைப்பதற்கே என்று பதிவிட்டுள்ளார்.
திருமா வளவன் தீட்டிய அரிவாள்
தென்னவர் சுழற்றியதே – அவன்
அரிமா போலே ஆர்த்த கருத்தும்
அரிவையர் வாழ்வதற்கே – அதை
அறிந்தும் சிலபேர் அழிம்பு புரிவது
அரசியல் செய்வதற்கே – நாம்
நெறியின் வழியே நீண்டு நடப்பது
நீதி நிலைப்பதற்கே@thirumaofficial— வைரமுத்து (@Vairamuthu) October 27, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025