ஆபாச படம் பார்த்தவர்களில் இந்தியாவில் தமிழகம் முதலிடம் வகிப்பதாக ஒரு ஆய்வறிக்கை தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து குழந்தைகள் ஆபாச படம் பதிவேற்றம் செய்பவர்கள், பகிர்ந்தவர்கள் என அனைவரும் கைது செய்யபட்டு அவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என தமிழக காவல்துறை அறிவித்தது.
இதை தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்பவர்களையும் ,பார்ப்பவர்களையும் போலீசார் கண்காணித்து வருகின்றன.அந்த வகையில் சமீபத்தில் திருச்சி பாலக்கரையை சேர்ந்த ஏ.சி. மெக்கானிக் கிறிஸ்டோபர் அல்போன்ஸ் என்பவர் 3 போலி பேஸ்புக் கணக்கு மூலம் குழந்தைகளின் ஆபாச வீடியோவை பதிவேற்றம் செய்துள்ளார்.
இதனால் போலீசார் அவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் போலீசார் சமூக வலைதளங்களை கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் கோவை சமூக ஊடகவியல் போலீசார் சமூக வலைதளங்களில் கண் காணித்தபோது அசாம் மாநிலத்தை சார்ந்த ரெண்டா பாசுமாடரி என்பவர் தனது முகநூலில் சிறார் ஆபாச படங்களை பதிவிட்டு வருவது தெரியவந்தது.இவர் பொள்ளாச்சியில் இருந்து ஆபாச படங்களை பதிவேற்றம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து சமூக ஊடகவியல் போலீசார் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இவர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
பின்னர் பாலக்காடு சாலையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்த ரெண்டா பாசுமாடரி என்பவரின் கைபேசி ஆய்வு செய்தபோது அந்த கைபேசியில் சிறார் ஆபாசப்படங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் போலீசார் விசாரித்த போது சிலர் ஆபாச படங்களை முகநூல் மூலமாக பலருக்கும் பகிர்ந்து வருவது தெரிய வந்தது.
இதனால் ரெண்டா பாசுமாடரி மீது போக்ஸோ மற்றும் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
சென்னை : மணிமேகலை விஷயத்தில் பிரியங்காவுக்கு எதிராக அவருடைய குணத்தை மட்டம் தட்டும் அளவுக்கு விமர்சனங்கள் எழுந்தது என்றே கூறலாம்.…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதியில் பல்வேறு மக்கள் நல திட்டங்களை…
கான்பூர் : கடந்த செப்.19 தேதி முதல் 4 நாட்களாக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில்…
சென்னை : நடிகர்கள் கார்த்தி, அரவிந்த் சாமி மற்றும் ஸ்ரீ திவ்யா உள்ளிட்டோர் நடித்துள்ள மெய்யழகன் திரைப்படம் வரும் செப்டம்பர்…
சென்னை : தமிழகத்தில் சட்டவிரோத குற்ற சம்பவங்களை தடுக்கும் நோக்கில் காவல்துறையினர் சமீப காலமாக தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு…
சென்னை : திரௌபதி, ருத்ர தாண்டவம் உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குநர் மோகன் ஜி அடிக்கடி தனக்குத்…