மக்களவையில் தேவேந்திர குல வேளாளர் மசோதா நிறைவேறியதை அடுத்து மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
குடும்பன், காலாடி, பண்ணாடி, கடையன், பள்ளன், தேவேந்திர குலத்தான், வாதிரியார் ஆகிய 7 பட்டியலின உட்பிரிவுகளைச் சேர்ந்தவர்களை தேவேந்திர குல வேளாளர் என்ற ஒரே பெயரில் அழைப்பதற்கான மசோதாவை மத்திய அரசு சமீபத்தில் கொண்டுவந்திருந்தது.
இதையடுத்து கடந்த 19ம் தேதி மக்களவையில். 7 பட்டியலின உட்பிரிவுகளை இணைத்து தேவேந்திர குல வேளாளர் என பொதுப்பெயரை அழைப்பதற்கான மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று, தமிழர்களுக்காக ஆதிதிராவிடர் பட்டியலில் திருத்தம் கொண்டுவரும் மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் மக்களவையில் ஒப்புதல் அளித்து நிறைவேற்றப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று மாநிலங்களைவையில் மத்திய அமைச்சர் தாவர்சந்த் கெலோட் இந்த மசோதாவை கொண்டுவந்த நிலையில், அதிமுக உறுப்பினர் நவநீதகிருஷ்ணன், காங்கிரஸின் மல்லிகார்ஜுன கார்கே, மத்திய அமைச்சர் ராமதாஸ் அதவாலே உள்ளிட்டோர் இதன் மீதான விவாதத்தில் பங்கேற்றனர். அதன்பின் இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் ஒப்புதல் அளிக்கப்பட்டு நிறைவேறியது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…