சென்னையில் வெள்ள தடுப்பு நடவடிக்கைகள்.! முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு.!  

Default Image

சென்னையில் வெல்ல தடுப்பு நடவடிக்கைகளுக்கு பரிந்துரை அளித்த திருப்புகழ் தலைமையிலான குழுவுக்கு பாராட்டுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை தலைமை செயலகத்தில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வெள்ள தடுப்பு நடவடிக்கை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சென்னையில் வெள்ள தடுப்பு நடவடிக்கைகளில் பரிந்துரைகள் அளித்த திருப்புகழ் குழுவுக்கு பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்தார்.

திருப்புகழ் குழு : 

சென்னையில், தேங்கும் மழைநீர் வடிகால் அமைப்பது தொடர்பாக பரிந்துரைகள் வழங்குவதற்கு ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் ஓர் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு இன்று இறுதிக்கட்ட அறிக்கையை முதலவரிடம் தாக்கல் செய்துள்ளது .

182 கோடி ரூபாய் :

சென்னையில் மழைநீர் வடிகால் அமைக்க 182 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருந்தது.  இதுவரை பெரும்பாலான இடங்களில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்ட நிலையில், இன்னும் சில மாதங்களில் சென்னையில் மீதம் உள்ள இடங்களிலும் முழுதாக மழைநீர் வடிகால் அமைக்கப்படும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்