“மீனவர்கள் பிரச்சனை” – மத்திய அமைச்சர் எல்.முருகன் அளித்த உறுதி!

Published by
Edison

இலங்கை கடற்படையால் சமீபத்தில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் விரைவில் வந்து விடுவார்கள்,அதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று மத்திய மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் உறுதி அளித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் 68 தமிழக மீனவர்கள் மற்றும் 75 மீன்பிடி படகுகளை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றனர். இதனையடுத்து,கைது செய்யப்பட்ட  மீனவர்கள் மற்றும் படகுகளை மீட்பதற்கு உடனடி நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள்,மத்திய  வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு கடிதம் எழுதினார்.

அதே சமயம்,கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரம்,மண்டபம்,புதுக்கோட்டை மீனவர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில்,இலங்கை கடற்படையால் சமீபத்தில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் விரைவில் வந்து விடுவார்கள்,அதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று மத்திய மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் உறுதி அளித்துள்ளார்.

இது தொடர்பாக,அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:

“மீனவர்களை விடுவிப்பதற்கான ஏற்பாடுகளை பிரதமர் மோடி அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்.இது தொடர்ந்து நடக்கக்கூடாது என்பதுதான் அனைவரின் எண்ணமாக உள்ளது.இதற்காக கூட்டுக் குழு(joint committee) ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளது.எனினும்,3 மாதத்திற்கு ஒரு முறை நடக்கவேண்டிய கூட்டுக் குழு கூட்டம்,கொரோனா காரணமாக தள்ளிப் போனது.விரைவில் அதற்கான தேதி அறிவிக்கப்படவுள்ளது.

மேலும்,கூட்டுக் குழு பேச்சுவார்த்தையின் மூலம் மீனவர்கள் கைது செய்யப்படுவதை முற்றிலுமாக தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துக் கொண்டிருக்கிறோம்.

இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைது செய்யப்படும் விவகாரத்தில் அவர்கள் எல்லை தாண்டி செல்வதுதான் பிரச்சனையாக கூறப்படுகிறது. சர்வதேச எல்லை என்பது 200 நாட்டிக்கல் மைல் உள்ளது,ஆனால்,குறிப்பிட்ட பகுதிகளில் 20 நாட்டிக்கல் மைல் தொலைவிலேயே வருவதால் மீனவர்கள் கைது பிரச்சனை தொடர்ந்து நடைபெறுகிறது.

இனி வருகின்ற காலத்தில்,கூட்டுக்குழு கமிட்டி மூலமாக இதை சரிசெய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு சட்டம் உண்டு.அதன்படி,அந்த நாட்டிற்கான சட்டத்தை கடைபிடித்து மீனவர்களை விரைவில் அழைத்து வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்.விரைவில் அவர்கள் வந்து விடுவார்கள் என்ற உறுதியையும் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்”,என்று தெரிவித்துள்ளார்.

Recent Posts

இது எங்க கோட்டை.! ‘விராட் 50, க்ருனால் 50 அடித்து அசத்தல்’.! ஆர்சிபி அபார வெற்றி..!!

இது எங்க கோட்டை.! ‘விராட் 50, க்ருனால் 50 அடித்து அசத்தல்’.! ஆர்சிபி அபார வெற்றி..!!

டெல்லி : நடப்பு ஐபிஎல் தொடரில் நெற்றிரவு நடைபெற்ற போட்டியில் பெங்களூர் மற்றும் டெல்லி அணிகள் மோதியது. இதற்கான டாஸில்…

9 minutes ago

தமிழ்நாடு அமைச்சரவையில் நிகழ்ந்த மாற்றம்.. யார் யாருக்கு எந்தெந்தத் துறை..?

சென்னை : முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை…

43 minutes ago

MI vs LSG: பவுலிங்கில் மிரட்டிய பும்ரா.., திணறிய லக்னோ.! மும்பை அணி அபார வெற்றி.!

மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…

12 hours ago

”தவெக ஆட்சியில் ஊழல் இருக்காது.,, சிறுவாணி தண்ணீர் போல ஆட்சியை அமைப்போம்” – விஜய்.!

குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…

13 hours ago

“புரட்சி உருவாகிக் கொண்டிருக்கிறது.., தேர்தல் முகவர்கள் சக்தி வாய்ந்தவர்கள்” – ஆதவ் அர்ஜுனா.!

சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…

13 hours ago

கோவையே அதிருது.., “யாரையும் பணம் கொடுத்து கூப்பிடவில்லை” – என்.ஆனந்த்.!

கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…

14 hours ago