சுருக்குமடி வலைக்கு அனுமதி கோரி மீனவர்கள் போராட்டம்.
கடலூர் மாவட்டத்தில், மீனவர்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இந்த தடை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ளது. இதனையடுத்து, தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரையில், மீனவர்கள் கருப்பு கொடியை ஏந்தியவாறு, சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதி வழங்குமாறு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக, சுருக்கும்டி வலையை பயன்படுத்தி மீனவர்கள் மீன் பிடித்து, அதனை விற்பனை விற்பனை செய்து, லாரியில் ஏற்றுமதி செய்து அனுப்பிய போது, மீன்வளத்துறை அதிகாரிகள் அந்த மீனை கொண்டு சென்ற, 10 லாரிகளை பிடித்துள்ளனர். இதனையடுத்து, அவர்கள் மீன்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டதை தொடர்ந்து அதிகாரிகள் அந்த லாரிகளை விடுவித்தனர்.
இதனையடுத்து, மீனவர்கள் தங்களது படகுகளை கடலில் நிறுத்தி, அதில் கருப்பு கொடிகளை கட்டிவிட்டிருந்த நிலையில், மீனவர்கள் கடலின் கரையில் நின்று போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் 20 ஆண்டுகளாக இந்த வலையை பயன்படுத்தி மீன் பிடித்து வருவதாகவும், இதனை தடை செய்வதால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கோரிக்கையை முன்வைத்து குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…