சுருக்குமடி வலைக்கு அனுமதி கோரி மீனவர்கள் போராட்டம்!

Default Image

சுருக்குமடி வலைக்கு அனுமதி கோரி மீனவர்கள் போராட்டம்.

கடலூர் மாவட்டத்தில், மீனவர்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இந்த தடை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ளது. இதனையடுத்து, தேவனாம்பட்டினம் வெள்ளி  கடற்கரையில், மீனவர்கள் கருப்பு கொடியை ஏந்தியவாறு, சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதி வழங்குமாறு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக, சுருக்கும்டி வலையை பயன்படுத்தி மீனவர்கள் மீன் பிடித்து, அதனை விற்பனை விற்பனை செய்து, லாரியில் ஏற்றுமதி செய்து அனுப்பிய போது, மீன்வளத்துறை அதிகாரிகள் அந்த மீனை கொண்டு சென்ற, 10 லாரிகளை பிடித்துள்ளனர். இதனையடுத்து, அவர்கள் மீன்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டதை தொடர்ந்து அதிகாரிகள் அந்த லாரிகளை விடுவித்தனர்.

 இதனையடுத்து, மீனவர்கள் தங்களது படகுகளை கடலில் நிறுத்தி, அதில் கருப்பு கொடிகளை கட்டிவிட்டிருந்த நிலையில், மீனவர்கள் கடலின் கரையில் நின்று போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் 20 ஆண்டுகளாக இந்த வலையை பயன்படுத்தி மீன் பிடித்து வருவதாகவும், இதனை தடை செய்வதால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கோரிக்கையை முன்வைத்து குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்