இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள 68 இந்திய மீனவர்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் தீரன்திருமுருகன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் ஒன்றை செய்தார். அந்த மனுவில், பாக். கடற்படை தாக்குதலில் குஜராத் மீனவர் உயிரிழந்த விவகாரத்தில் உடனடியாக செயல்பட்ட மத்திய அரசு 68 பேரை மீட்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை
மருத்துவ பரிசோதனை என்ற பெயரில் மீனவர்கள் மீது கிருமி நாசினி தெளித்து ஏற்புடையதல்ல.
நீதிமன்றம் தலையிட்டு 68 மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும் என தனது மனுவில் தெரிவித்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் கார்த்திகேயன், ஸ்ரீமதி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது..? என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை குறித்து நிலை அறிக்கையை நாளை மறுநாள் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அப்போது, மத்திய அரசு இலங்கை அரசை தொடர்பு கொண்டு பேசி வருகிறது. அறிக்கை தாக்கல் செய்ய காலஅவகாசம் வேண்டும் என மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, மீனவர்கள் 68 பேரை ஜனவரிக்குள் மீட்டு வாருங்கள் என்று கூறிய நீதிபதிகள் வழக்கை டிசம்பர் 31-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட்…
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்த நிலையில், …
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்து இருந்தார். அவர்…
ஹரியானா : மாநிலம் குருகிராமில் கடந்த ஏப்ரல் 5, 2025 அன்று, 46 வயது விமானப் பணிப்பெண்ணாகப் பயிற்சி பெற்ற ஒரு…
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…