மீனவர்களுக்கு சோதனை அடிப்படையில் சாட்டிலைட் போன் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் ..! அமைச்சர் ஜெயக்குமார்

Default Image

மீனவர்களுக்கு சோதனை அடிப்படையில் சாட்டிலைட் போன் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில்,  புயலை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. மீனவர்களுக்கு சோதனை அடிப்படையில் சாட்டிலைட் போன் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.அதேபோல் புயல் எச்சரிக்கையால்  மீன்வளத்துறை சார்பில் பழவேற்காடு முதல் குளச்சல் வரை அனைத்து படகுகளும் கரைக்கு திரும்ப அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
ஆந்திராவில் தமிழக மீனவர்கள் தங்க ஏற்பாடு செய்து தர, அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, இந்த பணிகளை ஆய்வுசெய்ய தெலுங்கு பேசும் 3 அதிகாரிகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்