பொள்ளாச்சி ஜெயராமனுக்கு தொடர்பா ? அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

Default Image

பொள்ளாச்சி வழக்கில் யார் தவறு செய்தலும் அவர்கள் சட்டத்திற்கு உட்பட்டவர்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

கடந்த 2019-ஆம் ஆண்டு தமிழகத்தையே உருக்கிய சம்பவம் பொள்ளாச்சி பாலியல் வழக்கு ஆகும்.இந்த வழக்கு தொடரபாக முதலில் 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.இந்த வழக்கு தொடர்ப்பன விசாரணைகளை சிபிஐ மேற்கொண்டு வருகிறது.

இந்த வழக்கு தொடர்பாக 2 ஆண்டுகளுக்குப் பிறகு பொள்ளாச்சி நகர அ.தி.மு.க. மாணவரணி செயலாளர் அருளானந்தம், ஹெரென் பால், பாபு ஆகிய மூவரையும் சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.பின்னர் கைதான அதிமுக பிரமுகர் உள்பட 3 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் உத்தரவு கோவை மகிளா நீதிமன்றம் பிறப்பித்தது.மேலும் அதிமுகவை சேர்ந்த அருளானந்தம் என்பவர்  அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கி வைக்கப்படுவதாக அறிவிக்க்கப்பட்டது.

இந்நிலையில்  இந்த வழக்கில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு தொடர்பு இருப்பதாக வெளியாகும் தகவல் குறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடன் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர் ,வழக்கினை சிபிஐ விசாரித்து வருதாகவும் ,யார் தவறு செய்தலும் அவர்கள் சட்டத்திற்கு உட்பட்டவர்கள்.மேலும் சிபிஐ விசாரணையில் தலையிட விருப்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Nagpur Violence -Sunita Williams LIVE
chennai corporation - dog
PM Modi says about Maha Kumbh mela 2025
Geetha jeevan - TN Assembly
DMK MP Kanimozhi
Murder Arrest
telangana reservation