இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு வேண்டும் ! பாஜக அலுவலகத்திற்கு நேரில் சென்ற அமைச்சர் ஜெயக்குமார்

Default Image

முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவளிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
நாங்குநேரி, விக்கிரவாண்டி ,புதுச்சேரியில் உள்ள காமராஜ் நகர் தொகுதிக்களுக்கு அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.அதிமுக சார்பாக விக்கிரவாண்டியில் முத்தமிழ்செல்வன் , நாங்குநேரியில் ரெட்டியார்பட்டி நாராயணன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ்  போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.ஆனால் அதிமுகவில் உள்ள பாஜகவின் நிலைப்பாடு என்ன என்பது தெரியாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் பாஜக அலுவலகத்திற்கு சென்றார் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார். முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவளிக்க வேண்டுகோள் விடுத்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்