தமிழகத்தில் முதல் பெண் ஜெனரல்.! முதல்வர் வாழ்த்து.. கனிமொழி எம்பி கேள்வி.! இந்திய ராணுவம் புதிய டிவீட்.!

Published by
மணிகண்டன்

கன்னியகுமாரியை சேர்ந்த ராணுவ அதிகாரி இக்னேஷியஸ் டெலோஸ் புளோரா இந்திய ராணுவத்தில் மேஜர் ஜெனரலாக பதவி உயர்த்தப்பட்டார். தமிழகத்தில் இருந்து மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்ற முதல் பெண் ராணுவ அதிகாரி இக்னேஷியஸ் டெலோஸ் புளோரா ஆவார்.

இந்த செய்தியை இந்திய ராணுவத்தின் வடக்கு பகுதி கமாண்டர் பிரிவு தங்கள் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருந்தனர். இந்த செய்தியை குறிப்பிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்து செய்தியை பதிவிட்டு இருந்தார்.

இதனை தொடர்ந்து, இந்திய ராணுவத்தின் வடக்கு பகுதி கமாண்டர் பிரிவு  தாங்கள் பதிவு செய்த டிவீட்டை டெலிட் செய்தனர். இந்த செயலை குறிப்பிட்டு திமுக எம்பி கனிமொழி தனது டிவிட்டர் பக்கத்தில் எதற்காக முதலமைச்சர் வாழ்த்து செய்தி பதிவிட்ட டிவீட்டை டெலிட் செய்தீர்கள் என கேள்வி கேட்டு இருந்தார். என்ன நடந்தது எனவும் இந்திய ராணுவத்தின் வடக்கு பகுதி கமாண்டர் பிரிவு டிவிட்டர் பக்கத்தை டேக் செய்து பதிவிட்டார்.

இந்நிலையில் இன்று இந்திய ராணுவத்தின் தலைமை பிரிவு தங்கள் டிவிட்டர் பக்கத்தில் ஏற்கனவே, இந்திய ராணுவத்தின் வடக்கு பகுதி கமாண்டர் பிரிவு பதிவு செய்து டெலிட் செய்த செய்தியை மீண்டும் பதிவு செய்து கன்னியகுமரியை சேர்ந்த ராணுவ அதிகாரி இக்னேஷியஸ் டெலோஸ் புளோரா இந்திய ராணுவத்தில் மேஜர் ஜெனரலாக பதவி உயர்த்தப்பட்டார் என செய்தியை குறிப்பிட்டுள்ளது.

ராணுவ ஜெனரல் பதவி உயர்வு பற்றிய செய்திகளை ராணுவ தலைமை தான் அதிகாரபூர்வமாக வெளியிட வேண்டும் என்றும், மாறாக தலைமை தெரிவிக்கும் முன்னர் வடக்கு பகுதி கமாண்டர் பிரிவு பதிவு செய்ததால் அந்த டிவீட் டெலிட் செய்யப்பட்டது என தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Published by
மணிகண்டன்

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 hour ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 hour ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 hour ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

2 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

2 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

2 hours ago