நேற்று ஊரக உள்ளாட்சிகளுக்கான முதற்கட்ட தேர்தல் நடைபெற்றது.இதனால் முதலமைச்சர் பழனிசாமி சேலத்தில் உள்ள அவரது சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று தனது குடும்பத்தாருடன் வாக்கு பதிவு செய்தார்.
ஜனவரி 16-ஆம் தேதி பொங்கல் விடுமுறை தினத்தன்று, பிரதமர் மோடி உரையை கேட்க 9-ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது.இதனால் அன்று 9-12 வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை கிடையாது என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,பிரதமர் மோடியின் உரையைக் கேட்க 16-01-2020 அன்று மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என உத்தரவிடுவதா? உடனே திரும்பப்பெறாவிட்டால் திமுக மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதன் பின்பு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், ஜனவரி 16ம் தேதி பிரதமர் மோடியின் உரையை எங்கிருந்து வேண்டுமானாலும் கேட்கலாம். பொங்கல் விடுமுறை ரத்து இல்லை .அனைத்து மாணவர்களும் பள்ளிக்கு வர வேண்டும் என சுற்றறிக்கையில் கூறப்படவில்லை என்று தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று சேலம் விமான நிலையத்தில் முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், வீட்டில் தொலைக்காட்சி இல்லாதவர்கள், ஜனவரி 16ல் பிரதமர் மோடியின் உரையை பள்ளியில் சென்று பார்க்கலாம். இது கட்டாயமில்லை .
பல்வேறு துறைகளில் தமிழகம் சிறந்து விளங்குகிறது.நிர்வாக திறனில் தமிழகத்திற்கு முதலிடம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.உள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக உள்நோக்கத்துடன் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது.2010-ம் ஆண்டு காங்கிரஸ் – திமுக கூட்டணியில் இருந்தபோது என்பிஆர் கொண்டுவரப்பட்டது, அரசுக்கு நெருக்கடி தரவே திமுக அதை எதிர்த்து போராடுகிறது.தேசிய குடியுரிமை பதிவேடு அமல்படுத்தப்படாது என மத்திய அரசு தெளிவாக கூறியுள்ளது.10 ஆண்டுக்கு ஒருமுறை எடுக்கப்படும் தேசிய மக்கள் தொகை பதிவேடுதான் அமல்படுத்தப்பட உள்ளது என்று தெரிவித்தார்.
சென்னை : இன்று மக்கள் நீதி மய்ய கட்சியின் 2வது பொதுக்கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 21] எபிசோடில் முத்துவும் மீனாவும் விபத்திலிருந்து தப்பினர். சிட்டியை வெறுக்கும் சத்யா ;…
இலங்கை : அண்டை நாடான இலங்கையில் இன்று காலையில் அதிபருக்கான தேர்தல் தொடங்கியது. இந்தத் தேர்தலில், தற்போதைய அதிபரான ரணில்…
சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…
சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…