தமிழகத்தில் இன்று முதல் விலையில்லா ரேஷன் பொருட்கள்.!

Default Image

இந்த மாதத்திற்கான விலையில்லா ரேஷன் பொருட்கள் இன்று முதல் வழங்கப்படும்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால், கொரோனா பரவலை தடுக்க சில தளர்வுகளுடன்  அடங்கிய ஊரடங்கு வருகின்ற 31-ம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து , தமிழகத்தில் ஜூலை மாதத்துக்கான விலையில்லா ரேஷன் பொருட்கள் வரும் 10 -ஆம் அதாவது (இன்று ) தேதி முதல் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த மாதத்திற்கான விலையில்லா ரேஷன் பொருட்கள் வாங்க கடந்த 6-ஆம் தேதி முதல் நேற்று (வியாழக்கிழமை) வரை டோக்கன் வழக்கப்பட்டது. இந்நிலையில், இன்று முதல் டோக்கனில் குறிப்பிட்டுள்ள தேதி மற்றும் நேரத்தின் அடிப்படையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகளில் சென்று விலையில்லா ரேஷன் பொருள்களை பெற்று கொள்ளலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்