தூத்துக்குடியில் இன்று முதல் விமான சேவைதொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் 25 -ம் தேதி முதல் விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், ஊரடங்கு மே 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்து மத்திய அரசு அறிவித்தது. இதனால் பஸ், ரயில், விமானசேவை எப்போது தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்கும் என மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்தார்.
இந்நிலையில், நேற்று முதல் விமானப் போக்குவரத்து தொடங்கியது. இதையடுத்து, சென்னை விமான நிலையத்தில் வெளியிலிருந்து வரும் 25 விமானம் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும், தமிழகத்திலிருந்து பிற மாநிலங்களுக்கு எவ்வளவு விமானங்கள் வேண்டுமானாலும் வெளியில் செல்லலாம் என்று தமிழக அரசு தெரிவித்தது.
மேலும், சென்னை, கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருச்சி போன்ற விமானநிலையங்கள் இயங்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது என நேற்று முன்தினம் தமிழக அறிவித்தது. இந்நிலையில், தூத்துக்குடியில் இன்று முதல் விமான சேவைதொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு பிற்பகல் 1.20 மணிக்கும், சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு பகல் 12.35 மணிக்கு விமான சேவை தொடங்கும் என விமான நிலைய இயக்குநர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…