குரங்கணி காட்டுத்தீ விபத்தில் தயார் நிலையில் 6 மருத்துவ குழுக்கள், 13 ஆம்புலன்சுகள்!

Published by
Venu

தேனி ஆட்சியர் பல்லவி பல்தேவ் காட்டுத்தீ ஏற்பட்டது பற்றி  செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, திருப்பூரில் இருந்து 12 பேரும், சென்னையில் இருந்து 24 பேரும் டிரெக்கிங் சென்றிருந்தனர்.

குரங்கணி மலையில் காட்டுத்தீயில் காயமடைந்தோருக்கு சிகிச்சை அளிக்க 6 மருத்துவ குழுக்கள், 13 ஆம்புலன்சுகள் தயார் நிலையில் உள்ளன என தேனி ஆட்சியர் பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டம், போடி அருகே குரங்கணி வனப்பகுதியில் டாப்ஸ்டேசன் உள்ளது. இது சுமார் 2 ஆயிரம் அடி உயரம் கொண்ட மலைப்பகுதியாகும். குரங்கணியில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் வனப்பகுதி அமைந்துள்ளது. இங்கு சுற்றுலாவுக்காக பலர் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் குரங்கணி வனப்பகுதியில் நேற்று பிடித்த தீயில் சுற்றுலா சென்ற 39 பேர் சிக்கிக்கொண்டனர். மலைப்பகுதியில் சிக்கியுள்ளவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை ஆண் மற்றும் பெண் உள்பட 25 பேர் மீட்கப்பட்டு உள்ளனர்.

தீயணைப்பு, வனத்துறை, வருவாய் மற்றும் காவல் துறையினர் ஆகியோர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.

காட்டுத்தீயில் சிக்கி மீட்கப்பட்ட காயமடைந்தோருக்கு சிகிச்சை அளிப்பதற்காக 6 மருத்துவ குழுக்கள், 13 ஆம்புலன்சுகள் தயார் நிலையில் உள்ளன என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

சிறகடிக்கஆசை சீரியல்- முத்துவின் ரூமில் மாட்டிக்கொள்ளும் ரோகிணி ..!

சிறகடிக்கஆசை சீரியல்- முத்துவின் ரூமில் மாட்டிக்கொள்ளும் ரோகிணி ..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [செப்டம்பர் 23]எபிசோடில் சத்யாவின் வீடியோவை பார்த்த ரோகினி மகிழ்ச்சி அடைகிறார்.. முத்துவின் செல்லை…

12 mins ago

மாப்ள – மச்சான் இடையிலான உறவு.. கவனம் ஈர்க்கும் ‘மெய்யழகன்’ ட்ரெய்லர்.!

சென்னை : நடிகர் கார்த்தி, அரவிந்த் சாமி மற்றும் ஸ்ரீ திவ்யா நடித்துள்ள "மெய்யழகன்" படத்தை சி.பிரேம்குமார் எழுதி இயக்கியுள்ளார்.…

32 mins ago

துலிப் டிராபி : சாம்பியன் பட்டம் வென்று “இந்தியா-A” அணி அசத்தல் !

அனந்தபூர் : இந்திய உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடர் கடந்த செப்-5 ம் தேதி அன்று தொடங்கியது. 3…

46 mins ago

திருப்பதி லட்டு விவகாரம் : சிறப்பு யாகம் நடத்தி ‘புனித நீர்’ தெளித்த தேவஸ்தானம்.!

திருப்பதி : ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் தேவஸ்தான லட்டுகளில் விலங்கின் கொழுப்புகள் கலந்ததாக சமீபத்திய…

2 hours ago

வார தொடக்கத்தில் உச்சம் தொட்ட தங்கம் விலை!

சென்னை : வார தொடக்க நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து…

2 hours ago

செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா வரலாற்று சாதனை! பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

புதாபெஸ்ட் : ஹங்கேரியில் நடைபெற்று வந்த இந்த ஆண்டிற்க்கான மற்றும் 45-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின், ஓபன் பிரிவில் இந்திய…

2 hours ago