குரங்கணி காட்டுத் தீயில் சிக்கி காயமடைந்தவர்களின் நிலை என்ன?தேனி, மதுரை மருத்துவனைகளில் விவரம்…..

Published by
Venu

9 பேர்  தேனி மாவட்டம் போடி அருகேயுள்ள குரங்கணியில் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி காயமடைந்தவர்களில்  தற்போது ஒருவருக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாக மருத்துவக்கல்லூரி முதல்வர் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.

இதனிடையே, குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி காயமடைந்தவர்களின் ஆண்கள் 3 பேர், பெண்கள் 5 பேர் என மொத்தம் 7 பேர் தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் அனுவித்யா 90 சதவீத தீக்காயத்துடனும், கண்ணன், ஸ்வேதா, சதீஸ் ஆகியோர் 50 சதவீத தீக்காயத்துடனும், சிவசங்கரி 30 சதவீத காயத்துடனும் மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

இலக்கியா என்பவர் 10 சதவீத காயத்துடன் சிகிச்சையில் உள்ளதாகவும், சபிதா என்பவர் 10 சதவீத காயங்களுடன் வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டதாகவும் தேனி மருத்துவக்கல்லூரி முதல்வர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

மேலும், காட்டுத்தீயில் சிக்கி காயமடைந்தவர்களில் 12 பேருக்கு மதுரை ராஜாஜி அரசுப் பொது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காயமடைந்தவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் நேரில் சந்தித்து பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் வீரராகவ ராவ், மதுரை அரசு மருத்துவமனையில் தீக்காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக தனிப்பிரிவு தொடங்கப்பட்டு உள்ளதாகவும், இதில் 5 பேர் கொண்ட மருத்துவக்குழு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

11 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

17 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

17 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

17 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

17 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

17 hours ago