தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல தீப்பெட்டி தொழிலும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 50 முழுநேர தொழிற்சாலையும், 300 பகுதிநேர தீப்பெட்டி தொழிற்சாலையும், அதுபோக 2000 சிறுதொழில் தீப்பெட்டி தொழிற்சாலைகளும் இயங்கி வருகிறது.
கனமழை காரணமாக கேரளாவில் இருந்து வரும் தீப்பெட்டி செய்ய தேவையான மரத்தடிகள் வரத்து குறைந்து உள்ளன. மேலும், அவற்றை கடுமையான மழை காரணமாக அதனை காய வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வடமாநிலத்தில் இருந்து பெறப்பட்ட ஆர்டர்களுக்கும், உள்ளூர் ஆர்டர்களுக்கும் தீப்பெட்டி தயாரித்து கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், தீப்பெட்டி மரத்தடியின் விலை, மூலப்பொருட்களின் விலை ஏற்றம், ளார் வாடகை, மின்கட்டணம் உயர்வு போன்றவை இந்த தொழிலை வெகுவாக பாதித்துள்ளது. இதன் காரணமாக தீப்பெட்டி உற்பத்தி செய்யும் தொழிற் சாலையும், தீப்பெட்டி பிரிண்ட் செய்யும் தொழிலும் தற்போது முடங்கியுள்ளது. இதன் காரணமாக சுமார் 300 கோடி ரூபாய் அளவிற்கு உற்பத்தி முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூர் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் , டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் விளையாடின. இதில் முதலில்…
சென்னை : தமிழ்நாடு பாஜகவின் 13வது மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தத் தேர்தல் செயல்முறையில்…
சென்னை : அடுத்தடுத்த பரபரப்பான நிகழ்வுகளுடன் பாஜக அரசியல் களம் நகர்ந்து வருகிறது. மத்திய அமைச்சரும் , பாஜக தேசிய…
சென்னை : அஜித்தின் 'குட் பேட் அக்லி' திரைப்படம் வெளியானதைத் தொடர்ந்து, படத்தில் கதாநாயகியாக நடிக்கும் நடிகை த்ரிஷா, இப்படம்…
சென்னை : திமுக அமைச்சர் பொன்முடி அண்மையில் ஒரு நிகழ்வில் பேசுகையில், இரு சமயத்தாரை குறிப்பிட்டு உடலுறவு குறித்து மறைமுகமாக…
சென்னை : திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அண்மையில் தனது தொகுதியான காட்பாடியில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் பேசுகையில், மாற்றுத்திறனாளிகள்…