2 குப்பை தொட்டி வைக்கவில்லையா.? அபராதம் கட்டுங்கள்.! சென்னை மாநகராட்சியின் அதிரடி நடவடிக்கை.!

Default Image

மக்கும் குப்பை , மக்காத குப்பை என இரு குப்பை தொட்டி வைக்காமல் இருக்கும் சென்னை கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. 

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட கடைகளில் மாநகராட்சி அதிரடியாய் சோதனை செய்து வருகிறார்கள். அதாவது கடையில் 2 விதமான குப்பை தொட்டி வைத்து குப்பைகளை சேகரிக்க வேண்டும்.  ஒன்று மக்கும் குப்பை தொட்டி, இன்னொன்று மக்காத குப்பை தொட்டி என இரு குப்பைத்தொட்டிகள் வைத்திருக்க வேண்டும்.

அப்படி குப்பை தொட்டிகள் வைத்திருக்காத கடைகளுக்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்து வருகின்றனர். அப்படி இது வரையில், 1,18,800 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனையில் 73 சதவீத கடைக்கார்கள் இரண்டு குப்பை தொட்டி வைத்திருந்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்