நிதித்துறை வளாகம் பெயர் மாற்றம் – அதிமுக கடும் கண்டனம்!

Published by
பாலா கலியமூர்த்தி

நிதித்துறை வளாகத்தின் பெயர் பேராசிரியர் அன்பழகன் மாளிகை என பெயர் மாற்றம் செய்ததற்கு அதிமுக கண்டனம்.

சென்னை ஒருங்கிணைந்த நிதித்துறை வளாகத்தின் பெயர் பேராசிரியர் அன்பழகன் மாளிகை என பெயர் மாற்றம் செய்ததற்கு அதிமுக கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தமிழக அரசியல் வரலாற்றில், தமிழ்நாட்டு மக்களின் நீங்கா இடம் பிடித்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களை கவுரவிக்கும் விதமாக சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள நிதித்துறை வளாகத்திற்கு அம்மா வளாகம் என அதிமுக ஆட்சி காலத்தில் பெயர் சூட்டப்பட்டது.

‘அம்மா வளாகம்’ என்ற பெயரில் இயங்கி வரும் அந்த நிதித் துறை வளாகத்தில் திமுக பொதுச் செயலாளராகவும், தமிழ்நாட்டின் அமைச்சராகவும் பணியாற்றிய பேராசிரியர் மறைந்த க.அன்பழகன் அவர்களின் சிலையை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளதாகவும், அந்த வளாகத்திற்கு ஏற்கனெவே உள்ள ‘அம்மா வளாகம்’ என்ற பெயரை நீக்கிவிட்டு பேராசிரியர் அன்பழகன் மாளிகை’ என்று பெயர் சூட்டப்பட உள்ளதாகவும் இன்று அனைத்துப் பத்திரிகைகளிலும் செய்தி வந்துள்ளது.

பேராசிரியர் அன்பழகன் நிதித் துறை உட்பட பல்வேறு இலாக்காக்களின் அமைச்சராக இருந்தவர். அவருக்கு அங்கு சிலை வைப்பதில் எவ்வித ஆட்சேபணையும் இல்லை. அதே சமயத்தில், ‘அம்மா வளாகம்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ள அந்த வளாகத்தின் பெயரை மாற்றி ‘பேராசிரியர் அன்பழகன் ‘மாளிகை’ என்று வைப்பது நாகரிகமற்ற செயல்.

ஒரு பெயரை எடுத்துவிட்டு இன்னொரு பெயரை வைப்பது என்பது, ஒருவரை இழிவுபடுத்திவிட்டு இன்னொவருவரை புகழ்வது போல் ஆகும். இதுபோன்ற செயல் தமிழ்ப் பண்பாட்டிற்கு, தமிழ் கவாச்சாரத்திற்கு எதிரான செயல். அம்மா அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக மட்டுமல்லாமல் ஒரு தேசியத் தலைவராக அனைவராலும் கருதப்பட்டார்.

இப்படிப்பட்ட தலைவரின் பெயரில் அமைந்துள்ள வளாகத்தின் பெயரை மாற்றம் செய்யப்படுகிறது என்று வந்துள்ள செய்தியில் உண்மை இருப்பின் அது அநாகரிகத்தின் உச்சம். அரசியல் காழ்ப்புணர்ச்சியின் உச்சகட்டம். இதற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

எனவே, ‘அம்மா வளாகம்’ என்ற பெயரை மாற்றி ‘பேராசிரியர் க. அன்பழகன் மாளிகை’ என்று வைப்பதை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உடனடியாக கைவிட வேண்டும் என்றும், புதியதாக வேறு மாளிகை தமிழ்நாடு அரசால் கட்டப்படும்போது அதற்கு அவர் பெயரைச் சூட்டலாம் என்றும் கேட்டுக் கொள்கிறோம் என்று ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

‘இட்லி கடை’யில் அருண் விஜய்… மாஸ் போஸ்டரை வெளியிட்டு ரிலீஸ் தேதி அறிவிப்பு.!

‘இட்லி கடை’யில் அருண் விஜய்… மாஸ் போஸ்டரை வெளியிட்டு ரிலீஸ் தேதி அறிவிப்பு.!

சென்னை : கடைசியாக தனது சொந்த இயக்கத்தில் "ராயன்" படத்தில் நடித்த நடிகர் தனுஷ் தற்போது 'நிலவுக்கு என்மேல் என்னடி…

32 minutes ago

பட்ஜெட் 2025 தாக்கல்! ஏற்றத்துடன் முடிந்த பங்குச்சந்தை…நிபுணர்கள் சொன்ன கருத்து!

டெல்லி : ஆண்டு தோறும் மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்யும் நாளில், பொதுவாக பங்குச்சந்தை பரபரப்பாக இருக்கும் என்பது அனைவர்க்கும்…

44 minutes ago

பட்ஜெட் 2025 : தமிழ்நாட்டின் ஒரு கோரிக்கை கூட சேர்க்க மனம் வரவில்லையா? மு.க.ஸ்டாலின் கேள்வி!

சென்னை : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில்நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், வருமானவரி விலக்கு…

2 hours ago

‘அரசு அலுவலகங்களில் திடீர் ஆய்வு’ ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு.!

சென்னை : தமிழகம் முழுவதும் 9 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 36 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை…

2 hours ago

நீங்களா இப்படி? பெண் ரசிகைக்குக்கு லிப் கிஸ் கொடுத்த உதித் நாராயண்!

புதுச்சேரி : பல மொழிகளில் ஹிட் பாடல்களை பாடி ரசிகர்களுக்கு பிடித்த பாடகர்களில் ஒருவராக இருக்கும் பாடகர் உதித் நாராயணன் ரசிகர்களை…

2 hours ago

மத்திய பட்ஜெட் எதிரொலி: ரூ.62 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை… சவரனுக்கு ரூ.360 உயர்வு!

சென்னை : கடந்த ஒரு மாதத்தில் தங்கம் விலை ஜெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இன்றைய தினம் மத்திய பட்ஜெட் தாக்கல்…

2 hours ago