Live : மத்திய பட்ஜெட் 2025-26 தாக்கல் முதல்… பல்வேறு அரசியல் நகர்வுகள் வரை…

பிப்ரவரி 1ம் தேதி இன்று முக்கியமான செய்திகள் பற்றி விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டு வருகிறது.

tamil live news

சென்னை : 2025-26ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட், நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட இருக்கிறது. மக்களவையில் காலை 11 மணிக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதை தாக்கல் செய்யவுள்ளார். பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் பகுதி 9 அமர்வுகளாக பிப்.13-ஆம் தேதி வரை நடக்கிறது. 2வது பகுதி மார்ச் 10 முதல் ஏப்ரல் 4ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

மேலும், ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு அனைத்து மாநிலங்களுக்கும் சென்று அரசியல் கட்சிகளிடம் கருத்து கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாக்களை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட 39 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் 2ஆவது கூட்டம் நேற்று நடைபெற்றது.

1 of 1
மணிகண்டன்

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை :

  • புதிய வரி விதிப்பின் கீழ் ரூ.12 லட்சம் வருமானம் வரை வருமானவரி செலுத்த வேண்டியதில்லை என அறிவித்ததற்கு தமிழக பாஜக மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் சார்பாக நன்றி தெரிவிக்கிறோம். அரசின் இந்த முடிவு நடுத்தர வர்க்கத்தினரின் சேமிப்பை அதிகரிக்கும் என்று எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்
  • மணிகண்டன்

    திமுக எம்.பி டி.ஆர்.பாலு : 

  • தேர்தல் நடைபெற உள்ள டெல்லியையும், இந்த வருட இறுதியில் தேர்தல் வரவுள்ள பீகாரையும் கருத்தில் கொண்டு பட்ஜெட் 2025 அறிவிக்கப்பட்டுள்ளது. 
  • கெளதம்

    12 லட்சம் ரூபாய் வரை வருமான வரி இல்லை

  • தனிநபர் வருமான வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.12 லட்சமாக அதிகரிக்கப்படுகிறது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
  • கெளதம்

    மானியம்

    ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ரூ.20 கோடி வரையிலான கடனுக்கு மானியம் வழங்கப்படும் என்று பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசி வருகிறார்.

    கெளதம்

    பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு

  • 22 லட்சம் வேலைவாய்ப்புகள்
  • தோல்பொருட்கள் உற்பத்தி துறையில் 22 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

  • 1.5 லட்சம் தபால் நிலையங்கள்
  • கிராமப்புறங்களில் 1.5 லட்சம் தபால் நிலையங்கள் அமைக்கப்படும்.

    கெளதம்

    மருத்துவக் கல்லூரிகளில் 10,000 கூடுதல் இடங்கள்

  • அடுத்த ஆண்டு மருத்துவக் கல்லூரிகளில் 10,000 கூடுதல் இடங்கள் ஏற்படுத்தப்படும். அடுத்த 3 ஆண்டுகளில் அனைத்து மாவட்ட மருத்துவமனைகளில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்படும் என்று பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசி வருகிறார்.
  • கெளதம்

    யூரியா உற்பத்தி ஆலை

  • அசாமில் யூரியா உற்பத்தி செய்ய ஆலை அமைக்கப்படும். இந்திய அஞ்சல்துறை, மிகப்பெரிய அளவிலான லாஜிஸ்டிக் மையமாக மாற்றப்படும் என்று பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசி வருகிறார்.
  • கெளதம்

    தொழிற்கடன்

  • பட்டியலின, பழங்குடியின பெண்கள் 5 லட்சம் பேருக்கு தொழிற்கடன் வழங்கப்படும். சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான கடன் உச்சவரம்பு ரூ.10 கோடியாக உயர்த்தப்படுகிறது என்று பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசி வருகிறார்.
  • கெளதம்

    வேளாண் உற்பத்தி பற்றி நிர்மலா சீதாராமன்

  • பருப்பு உற்பத்தியில் தன்னிறைவு அடைய இலக்கு நிர்ணயத்து அரசு செயல்படுகிறது. வேளாண் உற்பத்தியை பெருக்கவும், விவசாயிகள் வாழ்வை மேம்படுத்தவும் பட்ஜெட்டில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்று பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசி வருகிறார்.
  • கெளதம்

    கிசான் கிரெடிட் கார்டு உச்சவரம்பு

  • விவசாயிகளுக்கான ‘கிசான் கிரெடிட் கார்டு’ உச்சவரம்பு ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும் என்று பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசி வருகிறார்.
  • கெளதம்

    வெளிநடப்பு

  • நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் உரையை புறக்கணித்து எதிர்க்கட்சிகள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
  • கெளதம்

    10 அம்சங்கள் கொண்ட பட்ஜெட்

  • இளைஞர்கள் முன்னேற்றம், வறுமை ஒழிப்பு, உணவு உத்தரவாதம் உள்ளிட்ட 10 அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது .
  • கெளதம்

    பட்ஜெட் உரை

  • நமது பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தியா மீதான நம்பகத்தன்மை உலக அளவில் உயர்ந்துள்ளது. எல்லா பகுதிகளிலும் சமச்சீரான அளவில் வளர்ச்சி உள்ளது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசி வருகிறார்.
  • மணிகண்டன்

    பட்ஜெட் 2025 – 2026 :

  • கடும் அமளிக்கு நடுவே மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார் . 
  • கெளதம்

    கடும் அமளி

  • ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்ய நாடாளுமன்றம் கூடியது. எதிர்க்கட்சிகள் கடும் அமளிக்கு இடையே நிதியமைச்சர் பட்ஜெட்டை வாசிக்க தொடங்கினார்.
  • கெளதம்

    மத்திய அமைச்சரவை கூட்டம்

  • மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக, மத்திய அமைச்சரவை கூட்டம் நாடாளுமன்றத்தில் தொடங்கியது.
  • கெளதம்

    நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றம் வருகை

  • பட்ஜெட் தாக்கலுக்கு முன் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். பின்னர், குடியரசுத் தலைவர் இல்லத்திலிருந்து பட்ஜெட் ஆவணங்களுடன் நாடாளுமன்ற வளாகத்திற்கு வந்தார்.
  • 1 of 1

    Follow us

    Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    லேட்டஸ்ட் செய்திகள்