தூத்துக்குடி எட்டயபுரத்தில் பாரதியார் புகைப்பட கண்காட்சியை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் மகாகவி பாரதியார் பிறந்த ஊரில், அவரின் புகைப்பட கண்காட்சியை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று திறந்து வைத்தார். மேலும், இந்த நிகழ்ச்சியில் வாழிய பாரத மணித்திருநாடு என்ற மின்னூலையும் வெளியிட்டார் நிதியமைச்சர். மத்திய இணை அமைச்சர் எல் முருகனும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இதன்பின் பாரதியார் நூற்றாண்டு விழாவில் பேசிய நிதியமைச்சர், பெண் விடுதலைக்காக முதன்முதலில் குரல் கொடுத்தவர் பாரதியார். தூத்துக்குடி பள்ளிகளில் பாரதியார் பாடல், கவிதைகளை சொல்லி கொடுங்கள், போட்டி வைத்து பரிசளியுங்கள் என்றும் தெரிவித்தார்.
இதனிடையே, மகாகவி பாரதியார் மணி மண்டபத்தில் உள்ள பாரதியார் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பாரதியார் வாழ்ந்த இல்லத்துக்குச் சென்ற அவர் அங்குள்ள பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…