கல்லூரி மாணவர்களுக்கான இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வு வரும் 21ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை நடைபெறும் என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக கல்லூரிகள் திறக்கப்படாத நிலையில் அவர்களது செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களின் செமஸ்டர் தேர்வை தவிர மற்ற அனைத்து பருவ தேர்வுகளுக்கும் தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் தற்போது இறுதி ஆண்டு பயிலும் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுகளை குறித்த தேர்வு அட்டவணையை சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
அதில் இறுதி செமஸ்டர் தேர்வுகள் வரும் 21 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், தேர்வுக்கான முடிவுகள் அக்டோபர் 14 ஆம் தேதி மாலையில் வெளியிடப்படும் என்றும் அறிவித்துள்ளனர். மேலும் தமிழக மாணவர்கள் தேர்வு மையத்திற்கு வருகை தந்து தேர்வை எழுத வேண்டும் என்றும், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இறுதி செமஸ்டர் தேர்வை எழுதும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் தமிழகத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து எழுதும் மாணவர்கள் ஆன்லைன் மூலம் தேர்வு எழுதுவது குறித்த கோரிக்கையை வைத்தால் அவர்கள் ஆன்லைனில் தேர்வெழுத அனுமதிக்கப்படுவார்கள் என்றும் சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…