போராளிகள் புதைக்கப்படுவதில்லை விதைக்கப்படுகிறார்கள் என ஸ்டான் சுவாமிகள் மறைவிற்கு திமுக எம்.பி கனிமொழி இரங்கல் பதிவை வெளியிட்டுள்ளார்.
திருச்சியை சேர்ந்த ஸ்டான் சுவாமி என்பவர் ஜார்கண்டில் பழங்குடியினர் நலனுக்காக குரல் கொடுத்தவர். மேலும், இவர் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத்தில் சேர்ந்து பரப்புரையில் ஈடுபட்டதாக கூறி 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் கைது செய்யப்பட்டார். அதன்பின் எல்கர் பரிஷத் வழக்கு தொடர்பாக சிறையில் இருந்த இவருக்கு உரிய மருத்துவ வசதி கிடைக்கவில்லை எனவும் புகார் அளிக்கப்பட்டு இருந்தது.
அவருக்கு உரிய சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டு இருந்த நிலையில், இன்று காலை ஸ்டான் சுவாமி உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், திமுக எம்பி கனிமொழி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் போராளிகள் விதைக்கப்படுகிறார், புதைக்கப்படுவதில்லை என குறிப்பிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…