மேலும் ஐந்து பண்டிகை கால சிறப்பு ரயில்கள்… தெற்கு ரயில்வே அறிவிப்பு…

Default Image
பண்டிகை கால சிறப்பு ரெயில்கள் மேலும் ஐந்து மார்க்கங்களில் இயக்கப்படும் என்றும், இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு இன்று (ஞாயிற்றுக் கிழமை) தொடங்குகிறது என்றும் அறிவிப்பு.
  1. கயா முதல் சென்னை எழும்பூர் வரை  (வண்டி எண்: 02389) இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் வருகிற 25-ந்தேதி மற்றும் நவம்பர் மாதம் 1, 8, 15, 22, 29-ந்தேதிகளில் கயா ரெயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 5.35 மணிக்கு புறப்படும். மறுமார்க்கமாக எழும்பூர்-கயா (02390) இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் வருகிற 27-ந்தேதி மற்றும் நவம்பர் மாதம் 3, 10, 17, 24-ந்தேதி, டிசம்பர் மாதம் 1-ந்தேதிகளில் காலை 7 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்படும் என்றும்,
  2. இதேபோல்,  புவனேஷ்வர் முதல் புதுச்சேரி (வண்டி எண்: 02898) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 20, 27-ந்தேதி, நவம்பர் மாதம் 3, 10, 17, 24-ந் தேதிகளில் மதியம் 12 மணிக்கு புவனேஷ்வரில் இருந்து புறப்படும். மறுமார்க்கமாக புதுச்சேரி-புவனேஷ்வர் (02897) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 21, 28-ந்தேதி, நவம்பர் மாதம் 4, 11, 18, 25-ந்தேதிகளில் புதுச்சேரியில் இருந்து மாலை 6.45 மணிக்கு புறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  3. இதேபோல், செகந்தராபாத் முதல் திருவனந்தபுரம் ( வண்டி எண்:07230) இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் வருகிற 20-ந்தேதி முதல் நவம்பர் மாதம் 28-ந்தேதி வரை தினசரி மதியம் 12.20 மணிக்கு செகந்தராபாத்தில் இருந்து புறப்படும். மறுமார்க்கமாக திருவனந்தபுரம்-செகந்தராபாத் (07229) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 22-ந்தேதி முதல் நவம்பர் மாதம் 30-ந்தேதி வரை தினசரி காலை 7 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படும்.
  4.  கோரக்பூர்-திருவனந்தபுரம் (02511) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 23, 25, 30-ந்தேதி, நவம்பர் மாதம் 1, 6, 8, 13, 15, 20, 22, 27, 29-ந் தேதிகளில் காலை 6.35 மணிக்கு கோரக்பூரில் இருந்து புறப்படும். மறுமார்க்கமாக திருவனந்தபுரம்-கோரக்பூர் (02512) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 27, 28-ந்தேதி, நவம்பர் மாதம் 3, 4, 10, 11, 17, 18, 24, 2-ந்தேதி, டிசம்பர் மாதம் 1, 2-ந்தேதிகளில் காலை 6.05 மணிக்கு திருவனந்தபுரம் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.
  5.  மந்தாதி-ராமேஸ்வரம் (05120) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 25-ஆம் தேதி, நவம்பர் மாதம் 1, 8, 15, 22, 29-ந்தேதிகளில் இரவு 9 மணிக்கு மந்தாதி ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும். மறுமார்க்கமாக ராமேசுவரம்-மந்தாதி (05119) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 28-ந்தேதி, நவம்பர் மாதம் 4, 11, 18, 2-ந்தேதி, டிசம்பர் மாதம் 2-ந்தேதிகளில் இரவு 11 மணிக்கு ராமேசுவரத்தில் இருந்து புறப்படும். இந்த சிறப்பு ரயில்களுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் காலை 8 மணியில் இருந்து கவுண்ட்டர்கள் மற்றும் ‘ஆன்-லைனில்’ செய்து கொள்ளலாம் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

today live news
MI vs KKR - IPL 2025
raj thackeray
Puththozhil kalam - DMK MP Kanimozhi
Sellur raju - Sengottaiyan
MS Dhoni
Power Star Srinivasan - TVK leader Vijay