ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு தடையா.? சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

Published by
மணிகண்டன்

சென்னை : தேர்தல் நடத்தை விதிமுறைகளை காரணம் கூறி ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்க கூடாது – சென்னை உயர்நீதிமன்றம்.

தமிழகத்தில் மக்களவை தேர்தல் முடிந்தாலும், மற்ற மாநிலங்களில் ஜூன் 1 வரையில் தேர்தல் நடைபெற இருப்பதால், தேர்தல் முடிவு வெளியாகவுள்ள ஜூன் 4 வரையில் தேர்தல் நடைமுறை விதிமுறைகள் அமலில் இருக்கும் என தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்து இருந்தது. இருந்தும் வாகன சோதனைகள் மட்டும் மாநில எல்லை பகுதிகளில் மட்டும் தொடரும் என்றும் கூறப்பட்டது.

இப்படியான சூழலில் தேர்தல் நடத்தை விதிமுறையை கரணம் கூறி, ஊர் திருவிழாவில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு காவல்துறையினர் தடை விதிக்கப்பட்ட சம்பவம் விழுப்புரத்தில் நடைபெற்றுள்ளது. இதனால், சென்னை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவை சம்பத்தப்பட்ட காவல் நிலையத்திற்கு அளித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் தாலுகாவில் பழைய மரக்காணம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் கூழ் வார்த்தல் திருவிழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, வருகிற மே 18ஆம் தேதி கோவில் சார்பாக ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த அப்பகுதி வளத்தி காவல் நிலையத்தில் கோவில் நிர்வாகம் சார்பில் அனுமதி கோரப்பட்டது.

ஆனால் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதாக கரணம் கூறி மாரியம்மன் கோயில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு வளத்தி காவல் நிலையத்தில் அனுமதி மறுக்கப்பட்டது. இதனை அடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கேசவன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி குமரேஷ் பாபு அமர்வு முன்னர் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் நடைமுறை அமலில் இருப்பதால் அனுமதி மறுக்கப்பட்டதாக அரசு தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட நீதிபதி, தேர்தல் முடிந்த பிறகும் தேர்தல் நடத்தை விதிகளை காரணம் கூறி ஆடல் பாடல் போன்ற நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என கூறினார்.

மேலும், ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு ஏற்கனவே நடப்பில் உள்ள சட்டத்துக்கு உட்பட்டு கோவில் திருவிழாவில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடத்த உரிய அனுமதி வழங்க வேண்டும் என்று, விழுப்புரம் மாவட்டம் வளத்தி காவல் நிலையத்தினருக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபு உத்தரவிட்டார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

சாம்பியன்ஸ் டிராபி : குறுக்கே வந்த மழையால் போட்டி ரத்து… அரையிறுதிக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா.!

லாகூர் : சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடரில் நேற்று, ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் இடையே நடைபெற்ற போட்டி மழை காரணமாக…

55 minutes ago

வணிக பயன்பாட்டுக்கான LPG சிலிண்டர் விலை உயர்வு.!

மும்பை : மாதந்தோறும் 1ம் தேதி எல்பிஜி சிலிண்டரின் விலையில் மாற்றம் ஏற்படும். அந்த வகையில், இன்று  சென்னையில் வணிக…

1 hour ago

நடிகை வழக்கில் தொண்டர்கள் திரள் நடுவில் காவல் நிலையத்தில் சீமான் ஆஜர்!

சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…

10 hours ago

சிறுமி மீது தவறு? சர்ச்சை பேச்சு எதிரொலி.! மயிலாடுதுறை ஆட்சியர் அதிரடி மாற்றம்!

மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…

11 hours ago

தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…

சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…

13 hours ago

AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!

லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…

14 hours ago