‘எனது மனதிற்கு நெருக்கமான விழா’ – கிறிஸ்துமஸ் பெருவிழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

Default Image

சென்னையில், சாந்தோம் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் பெருவிழாவில் கலந்து கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்.

சென்னையில், சாந்தோம் மேல்நிலை பள்ளியில் கிறிஸ்துமஸ் பெருவிழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் முதல்வர் மு.ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றி வருகிறார்.

இந்த நிகழ்வில் பேசிய அவர், இது எனது மனதிற்கு நெருக்கமான விழா, அனைத்து மதங்களும் அன்பையே பொத்திகின்றன. அன்பின் வெளிப்பாடாகவே நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.  சிறுபான்மையினருக்கு எல்லா வகையான ஏற்றங்களும் தரும் ஆட்சியாக திமுகவின் அரசு உள்ளது.

நாம் மொழியால், இனத்தால் தமிழர்கள்; வழிபாடு என்பது அவரவர்களின் விருப்பம். அரசு மட்டுமே மக்களுக்கான அனைத்தையும் வழங்கிவிட முடியாது. இயக்கங்களின் ஒத்துழைப்பும் தேவை என்றும், தேர்தலின் போது, திமுக அளித்த 500 வாக்குறுதிகளில், 300-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதை பெருமையுடன் தெரிவித்து கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்