தாழ்த்தப்பட்ட பெண் என்பதால் தரையில் அமர வைக்கப்பட்ட பெண் ஊராட்சி மன்ற தலைவர்!

Default Image

ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஸ்வரி தரையில் அமர வைக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள தெற்குதிட்டை பெண் ஊராட்சி மன்றத் தலைவராக பணியாற்றி வருபவர் ராஜேஸ்வரி. இவர் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

இந்நிலையில், கடந்த ஜூலையில் நடைபெற்ற ஊராட்சி மன்ற கூட்டத்தில், ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஸ்வரி தரையில் அமர வைக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இவர் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், ராஜேஸ்வரி அவமதிக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும், சுதந்திர தினத்தன்று ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரியை தேசிய கொடி ஏற்றவும் அனுமதிக்கவில்லை என புகார் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்