பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை – முன்னாள் சிறப்பு டிஜிபி இன்று நேரில் ஆஜர்!

Published by
பாலா கலியமூர்த்தி

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு முன்னாள் சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இன்று விசாரணை.

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின்பேரில் முன்னாள் சிறப்பு டிஜிபி மற்றும் முன்னாள் எஸ்.பி. மீது சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கானது விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. பாலியல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் எஸ்.பி. விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆஜரான நிலையில், முன்னாள் சிறப்பு டிஜிபி ஆஜராகவில்லை.

இதனைத்தொடர்ந்து, வழக்கு விசாரணையை வருகிற 7-ஆம் தேதி இன்றைக்கு ஒத்திவைத்து நீதிபதி கோபிநாதன் உத்தரவிட்டாா். இந்த நிலையில், பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு முன்னாள் சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இன்று விசாரணை நடைபெறவுள்ளது. விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னாள் சிறப்பு டிஜிபி, முன்னாள் எஸ்.பி. ஆகியோர் ஆஜராக உள்ளனர்.

இதனிடையே, இந்த வழக்கை வருகிற டிசம்பா் 20ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று சென்னை உயா் நீதிமன்றம் தெரிவித்த நிலையில், வழக்கு விசாரணை வேகமாக நடைபெற்று வருகிறது. மேலும், இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் டிஜிபி, முன்னாள் எஸ்.பி. ஆகியோா் ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா் என்பது குறிப்பித்தக்கது.

Recent Posts

பஞ்சாப் ரொம்ப உக்கிரமா இருப்போம்! எதிரணிக்கு எச்சரிக்கை விட்ட பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்!

பஞ்சாப் ரொம்ப உக்கிரமா இருப்போம்! எதிரணிக்கு எச்சரிக்கை விட்ட பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்!

பஞ்சாப் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், போட்டியில் விளையாடும் அணிகள்…

25 minutes ago

இந்த வருஷம் ஒன்னில்ல.., மொத்தம் 13.! களைகட்டும் ஐபிஎல் திருவிழா!

டெல்லி : இந்த வருட ஐபிஎல் (IPL 2025) திருவிழா வரும் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்…

37 minutes ago

வானதி சீனிவாசன் கேட்ட கேள்வி…அண்ணாமலையை சீண்டி பதிலடி கொடுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி..!

சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி…

1 hour ago

மனைவி கண்முன்னே ரவுடி வெட்டிக்கொலை! 3 பேர் மீது போலீஸ் என்கவுண்டர்!

ஈரோடு : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று…

2 hours ago

வீர தீர சூரன் இப்படி தான் இருக்கும்! உண்மையை போட்டுடைத்த எஸ்.ஜே. சூர்யா!

சென்னை : தங்கலான் படம் எதிர்பார்த்த அளவுக்கு மக்களுக்கு மத்தியில் பெரிய வரவேற்பை பெறவில்லை என்கிற காரணத்தால் அடுத்ததாக நடிகர்…

2 hours ago

நாக்பூர் கலவரம் : முக்கிய புள்ளியை தூக்கிய போலீசார்..யார் இந்த பாஹிம் கான் ?

மகாராஷ்டிரா :  மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வெடித்த வன்முறையானது பெரிய அளவில் பேசுபொருளாக வெடித்திருக்கிறது. சாம்பாஜி நகரிலுள்ள அவுரங்கசீப் கல்லறையை அகற்றவேண்டுமென…

3 hours ago