கொடைக்கானலில் பெண் தீக்குளித்ததை வீடியோ எடுத்ததால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொடைக்கானலின் கீழ்மலை கேசிபட்டி பகுதியை சேர்ந்தவர் மாலதி(32). இவருக்கு சதீஷ் என்பவருடன் திருமணம் நடைபெற்று தற்போது கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் மாலதியின் கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும், தற்போது அந்த பெண்ணை திருமணம் செய்துள்ளதாகவும் கேள்விப்பட்டதை தொடர்ந்து மாலதி கணவரின் வீட்டில் சென்று தன்னை விட்டு விட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்வது குறித்து நீதி கேட்டுள்ளார்.
ஆனால் கணவர் மற்றும் அவரது வீட்டார் மாலதியை தரக்குறைவாக பேசி விரட்டியுள்ளனர். இதனால் மனமுடைந்த மாலதி கணவரின் வீட்டின் முன்பே தீக்குளித்துள்ளார். அவரை காப்பாற்ற முயற்சிக்காமல் அங்கிருந்தவர்கள் வேடிக்கை மட்டுமே பார்த்துள்ளனர். அதிலும் ஒருவர் பெண் தீக்குளிப்பதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளார். இதனையடுத்து பெண்ணை காப்பாற்றாமல் வீடியோ எடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் மாலதியின் கணவரான சதீஷின் அண்ணன் சரவணக்குமார் என்று கூறப்படுகிறது.
வாஷிங்டன் : அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவை 2025 மே…
சென்னை : பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 22, 2025) ராஜஸ்தான் மாநிலம் பிகானரில் இருந்து காணொலி வாயிலாக…
தஞ்சாவூர் : மாவட்டம், செங்கிப்பட்டி பகுதியில் உள்ள நாகப்பட்டினம்-திருச்சி நெடுஞ்சாலையில் மே 21, 2025 அன்று இரவு 8 மணியளவில்…
சத்தீஸ்கர்: மாநிலத்தில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய தலைவர் நம்பல கேசவ் ராவ் என்ற பசவராஜு உட்பட 27 மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு…
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வரும் நிலையில், அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான…
மும்பை : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், டெல்லி அணியும் மோதியது. முதலில் பேட்டிங் செய்த மும்பை…