மழை நீரில் சிக்கி உயிரிழந்த பெண் மருத்துவர்…! சுரங்க பாதையை மூட அதிகாரிகள் உறுதி…!

Published by
லீனா

ரயில்வே சுரங்கபாதையில் சிக்கி பெண் மருத்துவர் உயிரிழந்ததையடுத்து, அந்த பாதை மூடப்படும் என அறிவிப்பு.

புதுக்கோட்டை மாவட்டம் பொம்மாடிமலையிலிருந்து துடையூர் செல்லக்கூடிய சாலையில் சுரங்கப்பாதை போன்று ரயில்வே பாலம் அமைக்கப்பட்டுள்ளது இந்நிலையில் அங்கு பெய்த கனமழையால் அந்த தரைதளத்தில் தண்ணீர் தேங்கி இருந்துள்ளது. அங்கு 50 அடி அளவுக்கு தண்ணீர் தேங்கி இருக்கும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அந்த பாலம் வழியாக அரசு மருத்துவமனையில் பணியாற்றும் சத்யா என்ற பெண் மருத்துவர் அவரது மாமியாருடன் சென்றுள்ளார்.  அந்த தண்ணீரினுள் கார் மூழ்கியதையடுத்து, கார் செயல்படவில்லை. அவரது மாமியார்  வெளியேறி நீச்சலடித்து தண்ணீரை விட்டு வெளியே வந்த நிலையில், சத்யாவால் வெளியே வர இயலவில்லை.

 நீரில் இருந்து வெளியேற முடியாமல் தவித்த அரசு மருத்துவர் சத்யா மூச்சுத்திணறி  உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதன் விளைவாக அந்த கிராமத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், காவல்துறையினர் மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நிலையில், போராட்டத்தை கைவிட்ட மக்கள் கலைந்து சென்றனர்.

Recent Posts

விஸ்வரூபமாகும் திருப்பதி லட்டு சர்ச்சை.! சந்திரபாபு நாயுடு vs ஜெகன் மோகன் ரெட்டி.!  

விஸ்வரூபமாகும் திருப்பதி லட்டு சர்ச்சை.! சந்திரபாபு நாயுடு vs ஜெகன் மோகன் ரெட்டி.!

ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…

11 mins ago

லட்டு விவகாரம் : தேவஸ்தானம் அறிக்கை தாக்கல் செய்ய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு உத்தரவு!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…

34 mins ago

“பிரியங்கா அக்கா அந்த மாதிரி ஆள் கிடையாது”…ஆதரவாக குரல் கொடுத்த அமீர்!

சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…

55 mins ago

துலிப் டிராபி : வெகு நாட்களுக்கு பிறகு சதமடித்த சஞ்சு சாம்சன்! டெஸ்ட் போட்டி கனவு பலிக்குமா?

அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…

57 mins ago

சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவுக்கு கெட்ட நேரமா?. ரோகிணி போடும் அடுத்த குண்டு..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து  மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…

2 hours ago

“திருப்பதியில் ‘மகா பாவம்’ செய்துவிட்டனர்” குமுறும் முன்னாள் தலைமை அர்ச்சகர்.!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…

2 hours ago