மழை நீரில் சிக்கி உயிரிழந்த பெண் மருத்துவர்…! சுரங்க பாதையை மூட அதிகாரிகள் உறுதி…!

Default Image

ரயில்வே சுரங்கபாதையில் சிக்கி பெண் மருத்துவர் உயிரிழந்ததையடுத்து, அந்த பாதை மூடப்படும் என அறிவிப்பு.

புதுக்கோட்டை மாவட்டம் பொம்மாடிமலையிலிருந்து துடையூர் செல்லக்கூடிய சாலையில் சுரங்கப்பாதை போன்று ரயில்வே பாலம் அமைக்கப்பட்டுள்ளது இந்நிலையில் அங்கு பெய்த கனமழையால் அந்த தரைதளத்தில் தண்ணீர் தேங்கி இருந்துள்ளது. அங்கு 50 அடி அளவுக்கு தண்ணீர் தேங்கி இருக்கும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அந்த பாலம் வழியாக அரசு மருத்துவமனையில் பணியாற்றும் சத்யா என்ற பெண் மருத்துவர் அவரது மாமியாருடன் சென்றுள்ளார்.  அந்த தண்ணீரினுள் கார் மூழ்கியதையடுத்து, கார் செயல்படவில்லை. அவரது மாமியார்  வெளியேறி நீச்சலடித்து தண்ணீரை விட்டு வெளியே வந்த நிலையில், சத்யாவால் வெளியே வர இயலவில்லை.

 நீரில் இருந்து வெளியேற முடியாமல் தவித்த அரசு மருத்துவர் சத்யா மூச்சுத்திணறி  உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதன் விளைவாக அந்த கிராமத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், காவல்துறையினர் மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நிலையில், போராட்டத்தை கைவிட்ட மக்கள் கலைந்து சென்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்