செங்கல்பட்டில் கட்டுப்பாட்டை இழந்த கார் பனைமரத்தில் மோதி பெண் மருத்துவர் உயிரிழந்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள செய்யூர் அருகே ஓரியூர் என்னும் இடத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் பெண் மருத்துவராகிய ரேகா தனது நண்பர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தார். பாண்டிச்சேரி நோக்கி சென்றுகொண்டிருந்தபோது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பனை மரத்தில் மோதி உள்ளது.
இதில் கார் சுக்குநூறாக உடைந்துள்ளது, பெண் மருத்துவர் ரேகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். ஓட்டுநர் உட்பட மற்ற மூவரும் பலத்த காயமடைந்துள்ளனர். ஆபத்தான நிலையில் இருந்த இருவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…