உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த 3 வயது குழந்தை! காரணம் என்ன தெரியுமா?

Default Image

உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த 3 வயது குழந்தை.

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையத்தை சேர்ந்த பிரதீபா – இளமாறன் தம்பதியின் 3 வயது பெண் குழந்தை ப்ரவ்யா சாய். இந்த குழந்தை, பல்வேறு மலர்கள், காய்கறிகள், நிறங்களின் பெயர்களை சரியாக, வேகமாக ஒப்புவித்து அசத்தியுள்ளார்.

இந்த குழந்தையின் வீடியோ இணையத்தில் உலா வந்த நிலையில், இதனை கண்ட உலக சாதனை புத்தகத்தினர், குழந்தையின் நினைவாற்றலை சோதித்தனர். அப்போது மிக குறைந்த நேரத்தில், அதிக பொருட்களின் பெயர்களை ஒப்புவித்து குழந்தை ப்ரவ்யா-வை உலக சாதனை படைத்ததாக அங்கீகரித்துள்ளனர்.

இதனையடுத்து, குழந்தைக்கு அதற்கான பதக்கத்தையும், பாராட்டு சான்றிதழையும் வழங்கி கௌரவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்