கோவில்பட்டி சிறைக்கு வந்தபோது ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரின் உடலில் காயங்கள் இருந்தன, சிறைக்கைதி ராஜா சிங் வாக்குமூலம்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சார்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவருவரின் கொலை வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது. இது தொடர்பாக, இந்த வழக்கில் அடுத்தடுத்து போலீசார் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கோவில்பட்டி சிறைக்கைதி ராஜாசிங் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் வாக்குமூலம் ஒன்றை அளித்தார். அதில் கோவில்பட்டி சிறைக்கு ஜெயராஜ், பென்னிக்ஸ் வரும்போது அவர்களது பின்புறத்தில் காயங்கள் இருந்தன. உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் மட்டுமல்லாமல் காவல்துறை நண்பர்களும்(Friends Of Police) தங்களை தாக்கியதாக ஜெயராஜ் கூறினார்.
இருவருக்கும் காயம் ஏற்பட்ட பின்புறத்தை சுத்தப்படுத்தி சிறையில் மருந்தும் போடப்பட்டது எனவும், தன்னையும் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் பின்புறத்தில் தாக்கினர் என தெரிவித்தார். இந்நிலையில், ராஜாசிங் வாக்குமூலத்தின் அடிப்படையில் காவல் நிலையத்தில் வைத்து தாக்கியதாக ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் மீது எட்டு பிரிவுகளில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புதிய வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…