சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக கோவில்பட்டி அரசு மருத்துவருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்த விவகாரத்தில் தற்போது சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கில் முதலில் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ,உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், தலைமை காவலர்கள் முருகன், முத்துராஜா ஆகியோரை வருகின்ற 16-ஆம் தேதி வரை சிபிஐ காவலில் விசாரிக்க அனுமதி அளித்தது மதுரை முதன்மை நீதிமன்றம் .வருகின்ற 16-ஆம் தேதி மாலை 5 பேரையும் ஆஜர்படுத்தவும் உத்தரவு பிறப்பித்தது நீதிமன்றம். சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 5 போலீசாரிடம் 2-வது நாளாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக கோவில்பட்டி அரசு மருத்துவர் வெங்கடேஷ்-க்கு சிபிஐ அதிகாரிகள் அழைப்பு விடுத்தது சம்மன் அனுப்பியுள்ளது. ஜெயராஜ், பென்னிக்சுக்கு மருத்துவம் அளித்தவர் என்ற அடிப்படையில் மருத்துவர் வெங்கடேசிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது சிபிஐ
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…