#Breaking : தந்தை ,மகன் கொலை வழக்கு – அரசு மருத்துவருக்கு சிபிஐ சம்மன்

Default Image

 சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக கோவில்பட்டி அரசு மருத்துவருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம்  சாத்தான்குளத்தில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்த விவகாரத்தில் தற்போது சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கில்  முதலில் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ,உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், தலைமை காவலர்கள் முருகன், முத்துராஜா ஆகியோரை வருகின்ற 16-ஆம் தேதி வரை  சிபிஐ காவலில் விசாரிக்க அனுமதி அளித்தது மதுரை முதன்மை நீதிமன்றம் .வருகின்ற 16-ஆம் தேதி மாலை 5 பேரையும்  ஆஜர்படுத்தவும் உத்தரவு பிறப்பித்தது நீதிமன்றம்.  சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 5 போலீசாரிடம் 2-வது நாளாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில்  ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக கோவில்பட்டி அரசு மருத்துவர் வெங்கடேஷ்-க்கு சிபிஐ அதிகாரிகள் அழைப்பு விடுத்தது சம்மன் அனுப்பியுள்ளது. ஜெயராஜ், பென்னிக்சுக்கு மருத்துவம் அளித்தவர் என்ற அடிப்படையில் மருத்துவர் வெங்கடேசிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது சிபிஐ

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்