தந்தை,மகன் கொலை வழக்கு- தலைமை காவலர் ஜாமீன் மனு தள்ளுபடி

Default Image

சாத்தான்குளம் சம்பவத்தில் காவலர் முருகனின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சாத்தான்குளம் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கொலை தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் 10 போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முருகன், முத்துராஜ் ஆகியோரை கடந்த சில நாட்களுக்கு முன்பு சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் மதுரை முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் காவலர் முருகன் என்பவர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், ஜாமீனில் வெளியே வந்தால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதாக சிபிஐ தரப்பு தெரிவித்தது.இதனையடுத்து பிஐ வாதத்தை ஏற்று ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிமன்றம் அறிவித்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்